சினிமாக்களால் பறிபோகும் கற்பு


சினிமாக்களால் பறிபோகும் கற்பு
  பிள்ளைகளே உஷார்! 
  பெற்றோர்களே உஷார்! 
[ என் பிள்ளை கிளாசுக்குப் படிக்கப் போகுது என்று நம்பி அனுப்புகிறார்கள். ஆனால், பிள்ளைகளோ சினிமா, பார்க், இன்டர்நெட் என்று தங்களின் மானங்களை தவறான பாதைக்கு அனுப்புகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள்தான்.
நாம் மின்சாரத்தை தொட்டாலும், மின்சாரம் நம்மை தொட்டாலும் பாதிப்பு நமக்குதான். அதே போல்தான் ஆண், பெண்ணைத் தொட்டாலும், பெண், ஆணைத் தொட்டாலும் பாதிப்பு பெண்ணுக்குதான்.
உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் ஆசிரியர்கள், நிர்வாகம் பற்றி விசாரிக்க வேண்டும். ]
பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளை கல்வி கற்றவர்களாக ஆக்கவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கின்றீர்கள். பிள்ளைகளை பாடசாலை ,கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றில் அவர்களை சேர்த்துவிடுவதுடன் நமது வேலை முடிந்துவிடுவதில்லை. இனிமேல்தான் கவலையே ஆரம்பம் ஆகிறது. எப்படி?
முதலில் கல்லூரிகளுக்கு செல்லும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தினசரி நாம் உற்று நோக்க வேண்டும். ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் போது பிள்ளைகள் கல்வியை கற்பதை விட காமத்தை கற்பதற்கே அதிக நேரம் செலவழிக்கின்றார்கள்.
இன்றைய நவீன கலாசாரங்களான செல்போன்கள், இன்டெர்நெட் போன்றவைகள் இவர்களின் மூளை கல்வியைக் கற்பதை விட காமத்தை கற்க அதிகம் தூண்டுகிறது.
இந்த நவீன கலாசாரங்களின் பாதிப்புகள் பிள்ளைகளை வீட்டில் அதிகம் தாக்குவதில்லை. வெளியிடங்களில்தான் அதிகம் தாக்குகிறது.பிள்ளைகள் வீட்டில் இருந்துதான் கல்லூரிகளுக்கு படிக்க போகின்றார்கள். பிறகு எப்படி தவறு செய்வார்கள் என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் வீட்டிலிருந்து கல்லூரிகளுக்கு தான் போகிறர்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்? வீட்டில் இருந்தபடி செல்போனின் மூலம் தங்களின் நட்பு வட்டாரங்களுக்கு ஆளனுப்பி இன்று எந்தப் படம் பார்க்கப் போகலாம் என்று தங்களின் தவறுகளை தவறே இல்லாமல் செய்ய தொடங்குகிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பெண் பிள்ளைகள் ஆண்களிடமும், ஆண் பிள்ளைகள் பெண்களிடம் இந்த ஆளுகளை அனுப்புகிறார்கள்.
என் பிள்ளை கிளாசுக்குப் படிக்கப் போகுது என்று நம்பி அனுப்புகிறார்கள். ஆனால், பிள்ளைகளோ சினிமா, பார்க், இன்டர்நெட் என்று தங்களின் மானங்களை தவறான பாதைக்கு அனுப்புகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள்தான். நாம் மின்சாரத்தை தொட்டாலும், மின்சாரம் நம்மை தொட்டாலும் பாதிப்பு நமக்குதான். அதே போல்தான் ஆண், பெண்ணைத் தொட்டாலும், பெண், ஆணைத் தொட்டாலும் பாதிப்பு பெண்ணுக்குதான்.
கல்வி கற்கத் தேவை கல்லூரிகள். காமத்தை கற்கத் தேவை திரையரங்குகள் என்றாகிவிட்டது. அங்கே தங்களின் காம பாடமுறைகளை ஆரம்பிக்கின்றார்கள். சினிமா திரையரங்கங்களை பற்றி சொல்ல தேவையே இல்லை. அந்த அளவுக்கு இந்தப் பணிகளை ஓய்வு இல்லாமல் செய்ய அனுமதி அளிக்கிறார்கள்.
திரையரங்கின் உள்ளே சென்றால் ஒரே இருட்டாக இருக்கும். இந்த இருட்டில் ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்வார்கள். அந்த திரைப்படம் முடிவதற்குள் ஒரு மினி தாம்பத்தியம் நடத்திவிடுவார்கள். நவூதுபில்லாஹ்! அல்லாஹ் நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இப்படி எல்லா பிள்ளைகளும் செய்வதில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றோம்.
இதற்கு அடுத்து இன்னும் மேலே போய் இன்டர்நெட் மூலமாக தங்களின் காமப் பாடங்களை ஆரம்பிக்கின்றார்கள். பின்னர் தங்களின் அந்தரங்கங்களை அறிமுகம் செய்து பின்னர் தங்களின் அங்கங்களை அறிமுகம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இவையனைத்தும் இன்டர்நெட் மூலம் எடுக்கப்படும் தியரிகள். தியரி மட்டும் பார்த்தால் போதுமா? அதனால் இன்டர்நெட் மூலமே ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே பிராக்டிகல் பாடத்தையும் நடத்துகிறார்கள். நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் அல்லாஹ் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், சில பிள்ளைகள் இப்படி வழி தவறுவதை மறக்கவும், மறைக்கவும் முடியாமல்தான் இங்கே நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இதில் சில வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள். இன்னும் நாங்கள் சொல்லாத எவ்வளவோ இருக்கின்றன. அதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வளவு தவறுகள் நடக்கின்றதே யார் மீது குற்றம் சொல்ல? தவறு செய்யக்கூடிய பிள்ளைகளையா? இல்லை தவறுகளை செய்யத் தூண்டுகின்ற நவீன கலாசாரங்களையா? இல்லை தவறுகள் நடப்பதை கவனிக்காமல் இருக்க கூடிய பெற்றோர்களையா? யாரை நாம் குறை சொல்வது? யாரையும் குறை கூற வேண்டாம்? குறைகளை சொல்லி காலத்தை கடத்துவதை விட குறைகளைக் களைய கண்காணிப்போடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். அதற்கு சில அறிவுரைகளை மனதிலும் மூளையிலும் பதிய வைப்போம்.
அறிவுரைகள்:
1. உங்கள் பிள்ளைகளிடம் செல்போன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
2. பாடம் சம்பந்தமாக சில விஷயங்களை இன்டெர்நெட் மூலம் பார்க்க வேண்டும் என்றால், வீட்டில் இருந்து ஒரு நபர் இன்டர்நெட் மையங்களுக்க அழைத்துச் செல்ல வேண்டும். மையங்களில் உள்ள அறையின் உள்ளேயும் நீங்கள் இருந்து அவதானிக்க வேண்டும்.
3. வீட்டில் கணிப்பொறி இருந்தால் உங்கள் கண்காணிப்பில் அவர்கள் இன்டெர்நெட் பார்க்க வேண்டும். இதை அன்பாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.
4. உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் ஆபாசங்களை, சினிமா சீரியல்களைத் தவிர்த்து அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.
5. கல்லூரிகளுக்கு அழைத்துப் போவதும் அழைத்து வருவதும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
6. உங்கள் பிள்ளைகள் வெளியே போனால் பர்தா முறையை கண்டிப்பாக கடைபிடிக்க சொல்ல வேண்டும்.
7. கல்லூரிகளின் நிர்வாகிகளின், ஆசிரியர்களின் குணங்களை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
8. மதரஸாக்களில் பிள்ளைகளைச் சேர்த்தாலும் அங்கும் எச்சரிக்கையாகத்தான் நீங்கள் இருக்கவேண்டும். அங்கும் சில பசுத்தோல் போர்த்திய புலிகள் இருக்கின்றன. காமவெறியாட்டம் ஆடக் கூடிய நிர்வாகிகள் எல்லா இடங்கிலும் இருக்கின்றார்கள்
9. உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் ஆசிரியர்கள், நிர்வாகம் பற்றி விசாரிக்க வேண்டும். சில மதுரஸாக்கள் பெற்றார் ஆசிரியர் கூட்டங்களை நடத்துவதில்லை. இதுபற்றியும் அவதானமாக இருக்க வேண்டும்.
10. அல்குர்ஆன் மதரஸாக்களிலுள்ள லெப்பைகள் நீக்கப்பட்டு, அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதத்தெரிந்த பக்குவமான ஆலிம்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களிடம் அனுப்பப்படும் பிள்ளைகள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
11. உங்கள் பிள்ளைகளுக்கு தினசரி கொடுக்கக்கூடிய பணத்தைப் பற்றியும், அவர்களின் செலவினங்களைப் பற்றியும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் செலவுகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இதை மென்மையாகக் கையாள வேண்டும்.
12. உலகக் கல்வியோடு இறையச்சத்தை ஊட்டக் கூடிய மார்க்கக் கல்வியையும் கண்டிப்பாகக் கற்றுக் கொடுங்கள்.இறையச்ச உணர்வு இருந்தால், அவர்கள் எல்லாத் தீமைகளில் இருந்தும் விலகி, அவர்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
13. மேலே சொன்ன அனைத்தையும் விட உங்கள் பிள்ளைகளின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அழிப்பாயாக. நல்லோருடன் எங்களைக் கைப்பாற்றுவாயாக. (அல்குர்ஆன் 3:193)