சினிமாக்களால் பறிபோகும் கற்பு


சினிமாக்களால் பறிபோகும் கற்பு
  பிள்ளைகளே உஷார்! 
  பெற்றோர்களே உஷார்! 
[ என் பிள்ளை கிளாசுக்குப் படிக்கப் போகுது என்று நம்பி அனுப்புகிறார்கள். ஆனால், பிள்ளைகளோ சினிமா, பார்க், இன்டர்நெட் என்று தங்களின் மானங்களை தவறான பாதைக்கு அனுப்புகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள்தான்.
நாம் மின்சாரத்தை தொட்டாலும், மின்சாரம் நம்மை தொட்டாலும் பாதிப்பு நமக்குதான். அதே போல்தான் ஆண், பெண்ணைத் தொட்டாலும், பெண், ஆணைத் தொட்டாலும் பாதிப்பு பெண்ணுக்குதான்.
உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் ஆசிரியர்கள், நிர்வாகம் பற்றி விசாரிக்க வேண்டும். ]
பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளை கல்வி கற்றவர்களாக ஆக்கவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கின்றீர்கள். பிள்ளைகளை பாடசாலை ,கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றில் அவர்களை சேர்த்துவிடுவதுடன் நமது வேலை முடிந்துவிடுவதில்லை. இனிமேல்தான் கவலையே ஆரம்பம் ஆகிறது. எப்படி?
முதலில் கல்லூரிகளுக்கு செல்லும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தினசரி நாம் உற்று நோக்க வேண்டும். ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் போது பிள்ளைகள் கல்வியை கற்பதை விட காமத்தை கற்பதற்கே அதிக நேரம் செலவழிக்கின்றார்கள்.
இன்றைய நவீன கலாசாரங்களான செல்போன்கள், இன்டெர்நெட் போன்றவைகள் இவர்களின் மூளை கல்வியைக் கற்பதை விட காமத்தை கற்க அதிகம் தூண்டுகிறது.
இந்த நவீன கலாசாரங்களின் பாதிப்புகள் பிள்ளைகளை வீட்டில் அதிகம் தாக்குவதில்லை. வெளியிடங்களில்தான் அதிகம் தாக்குகிறது.பிள்ளைகள் வீட்டில் இருந்துதான் கல்லூரிகளுக்கு படிக்க போகின்றார்கள். பிறகு எப்படி தவறு செய்வார்கள் என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் வீட்டிலிருந்து கல்லூரிகளுக்கு தான் போகிறர்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்? வீட்டில் இருந்தபடி செல்போனின் மூலம் தங்களின் நட்பு வட்டாரங்களுக்கு ஆளனுப்பி இன்று எந்தப் படம் பார்க்கப் போகலாம் என்று தங்களின் தவறுகளை தவறே இல்லாமல் செய்ய தொடங்குகிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பெண் பிள்ளைகள் ஆண்களிடமும், ஆண் பிள்ளைகள் பெண்களிடம் இந்த ஆளுகளை அனுப்புகிறார்கள்.
என் பிள்ளை கிளாசுக்குப் படிக்கப் போகுது என்று நம்பி அனுப்புகிறார்கள். ஆனால், பிள்ளைகளோ சினிமா, பார்க், இன்டர்நெட் என்று தங்களின் மானங்களை தவறான பாதைக்கு அனுப்புகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள்தான். நாம் மின்சாரத்தை தொட்டாலும், மின்சாரம் நம்மை தொட்டாலும் பாதிப்பு நமக்குதான். அதே போல்தான் ஆண், பெண்ணைத் தொட்டாலும், பெண், ஆணைத் தொட்டாலும் பாதிப்பு பெண்ணுக்குதான்.
கல்வி கற்கத் தேவை கல்லூரிகள். காமத்தை கற்கத் தேவை திரையரங்குகள் என்றாகிவிட்டது. அங்கே தங்களின் காம பாடமுறைகளை ஆரம்பிக்கின்றார்கள். சினிமா திரையரங்கங்களை பற்றி சொல்ல தேவையே இல்லை. அந்த அளவுக்கு இந்தப் பணிகளை ஓய்வு இல்லாமல் செய்ய அனுமதி அளிக்கிறார்கள்.
திரையரங்கின் உள்ளே சென்றால் ஒரே இருட்டாக இருக்கும். இந்த இருட்டில் ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்வார்கள். அந்த திரைப்படம் முடிவதற்குள் ஒரு மினி தாம்பத்தியம் நடத்திவிடுவார்கள். நவூதுபில்லாஹ்! அல்லாஹ் நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இப்படி எல்லா பிள்ளைகளும் செய்வதில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றோம்.
இதற்கு அடுத்து இன்னும் மேலே போய் இன்டர்நெட் மூலமாக தங்களின் காமப் பாடங்களை ஆரம்பிக்கின்றார்கள். பின்னர் தங்களின் அந்தரங்கங்களை அறிமுகம் செய்து பின்னர் தங்களின் அங்கங்களை அறிமுகம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இவையனைத்தும் இன்டர்நெட் மூலம் எடுக்கப்படும் தியரிகள். தியரி மட்டும் பார்த்தால் போதுமா? அதனால் இன்டர்நெட் மூலமே ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே பிராக்டிகல் பாடத்தையும் நடத்துகிறார்கள். நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் அல்லாஹ் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், சில பிள்ளைகள் இப்படி வழி தவறுவதை மறக்கவும், மறைக்கவும் முடியாமல்தான் இங்கே நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இதில் சில வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள். இன்னும் நாங்கள் சொல்லாத எவ்வளவோ இருக்கின்றன. அதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வளவு தவறுகள் நடக்கின்றதே யார் மீது குற்றம் சொல்ல? தவறு செய்யக்கூடிய பிள்ளைகளையா? இல்லை தவறுகளை செய்யத் தூண்டுகின்ற நவீன கலாசாரங்களையா? இல்லை தவறுகள் நடப்பதை கவனிக்காமல் இருக்க கூடிய பெற்றோர்களையா? யாரை நாம் குறை சொல்வது? யாரையும் குறை கூற வேண்டாம்? குறைகளை சொல்லி காலத்தை கடத்துவதை விட குறைகளைக் களைய கண்காணிப்போடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். அதற்கு சில அறிவுரைகளை மனதிலும் மூளையிலும் பதிய வைப்போம்.
அறிவுரைகள்:
1. உங்கள் பிள்ளைகளிடம் செல்போன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
2. பாடம் சம்பந்தமாக சில விஷயங்களை இன்டெர்நெட் மூலம் பார்க்க வேண்டும் என்றால், வீட்டில் இருந்து ஒரு நபர் இன்டர்நெட் மையங்களுக்க அழைத்துச் செல்ல வேண்டும். மையங்களில் உள்ள அறையின் உள்ளேயும் நீங்கள் இருந்து அவதானிக்க வேண்டும்.
3. வீட்டில் கணிப்பொறி இருந்தால் உங்கள் கண்காணிப்பில் அவர்கள் இன்டெர்நெட் பார்க்க வேண்டும். இதை அன்பாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.
4. உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் ஆபாசங்களை, சினிமா சீரியல்களைத் தவிர்த்து அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.
5. கல்லூரிகளுக்கு அழைத்துப் போவதும் அழைத்து வருவதும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
6. உங்கள் பிள்ளைகள் வெளியே போனால் பர்தா முறையை கண்டிப்பாக கடைபிடிக்க சொல்ல வேண்டும்.
7. கல்லூரிகளின் நிர்வாகிகளின், ஆசிரியர்களின் குணங்களை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
8. மதரஸாக்களில் பிள்ளைகளைச் சேர்த்தாலும் அங்கும் எச்சரிக்கையாகத்தான் நீங்கள் இருக்கவேண்டும். அங்கும் சில பசுத்தோல் போர்த்திய புலிகள் இருக்கின்றன. காமவெறியாட்டம் ஆடக் கூடிய நிர்வாகிகள் எல்லா இடங்கிலும் இருக்கின்றார்கள்
9. உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் ஆசிரியர்கள், நிர்வாகம் பற்றி விசாரிக்க வேண்டும். சில மதுரஸாக்கள் பெற்றார் ஆசிரியர் கூட்டங்களை நடத்துவதில்லை. இதுபற்றியும் அவதானமாக இருக்க வேண்டும்.
10. அல்குர்ஆன் மதரஸாக்களிலுள்ள லெப்பைகள் நீக்கப்பட்டு, அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதத்தெரிந்த பக்குவமான ஆலிம்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களிடம் அனுப்பப்படும் பிள்ளைகள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
11. உங்கள் பிள்ளைகளுக்கு தினசரி கொடுக்கக்கூடிய பணத்தைப் பற்றியும், அவர்களின் செலவினங்களைப் பற்றியும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் செலவுகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இதை மென்மையாகக் கையாள வேண்டும்.
12. உலகக் கல்வியோடு இறையச்சத்தை ஊட்டக் கூடிய மார்க்கக் கல்வியையும் கண்டிப்பாகக் கற்றுக் கொடுங்கள்.இறையச்ச உணர்வு இருந்தால், அவர்கள் எல்லாத் தீமைகளில் இருந்தும் விலகி, அவர்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
13. மேலே சொன்ன அனைத்தையும் விட உங்கள் பிள்ளைகளின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அழிப்பாயாக. நல்லோருடன் எங்களைக் கைப்பாற்றுவாயாக. (அல்குர்ஆன் 3:193)

முதலிரவன்று நீங்க சொன்னதை எப்படி மறக்க முடியும்...?!


 முதலிரவன்று நீங்க சொன்னதை எப்படி மறக்க முடியும்...?!
காலை மணி 11 இருக்கும்
‘ரெடியா இரு, இதோ வந்துர்றேன்...."
‘புரியலீங்க! எதுக்கு ரெடியா இருக்கச் சொல்றீங்க....?"
‘எல்லாம் அதுக்குத்தாங்கறேன்!’
‘அதுக்குத்தான்னா.... எதுக்குங்க? கொஞ்சம் புரியற மாதிரிதான் சொல்லுங்களேன்!’
‘நாம ரெண்டு பேர் மட்டும் ஒரு எடத்துக்கப் போறோம்.... அதுக்குத்தான்!’
‘எந்த எடம்னு சொல்லக்கூடாதோ?’
‘சொன்னா சஸ்பென்ஸ் கொறைஞ்சிடும்!’
‘ஓ! அப்படியா?’
‘அப்படியேதான்.... அதோட இன்னோரு ஆப்ளிகேஷன்’
‘என்னன்ன சொல்லுங்க.... ரொம்ப சஸ்பென்ஸா இருக்கே!’
‘ஒன்னுமில்லே! உன்னே நல்லா அழகா ஜோடிச்சுகோ!’
‘இதென்ன புதுக்கதையா இருக்கு! பொஞ்சாதிங்களெல்லாம் வீட்டுலெ இருக்கும்போது கணவனுக்கு எதிர்த்தாப்பல தான் தன்னை அழகுபடுத்திக்கிடணும், வெளியில் போறச்சே சாதாரணமாத்தான் இருக்கணும்னு நீங்கதானே அடிக்கடி சொல்வீங்க! இப்போ என்னங்க புதுசா வெளியே போறதுக்கு அலங்கரிச்சுக்கன்னு சொல்றீங்க! என்ன ஆச்சு உங்களுக்கு?’
‘நான் வீட்டுக்க வந்தப்புறம் எல்லாத்துக்கும் பதிலே தானாவே நீ தெரிஞ்சுக்குவே! அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கேன்.... அதோடு இன்னொரு விஷயம் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு மறக்காம செண்ட் அடிச்சுக்க! மல்லியப்பூ கெடச்சா தலை நெறைய வெச்சுக்கோ.... அப்புறம்....’
‘என்ன ஆச்சு உங்களுக்கு? ‘வெளியே போகும்போது பொம்பளைங்க செண்ட்டு அடிச்சுக்கக்கூடாது’ன்னு 144 போட்டதே நீங்கதானே! இப்ப என்ன திடீர்னு எல்லாத்தையும் காத்துலெ பறக்க வுட்றீங்க!’
‘நான் சொல்றதை செய்! மத்ததை நேரிலே தெரிஞ்சக்குவே!’
கணவன் மனைவிக்குள் டெலிஃபோன் பேச்சு அதோடு கட்டானது.
கணவன் பேச்சை தட்டாத மனைவி மட்டுமல்ல அவள்! கணவனின் சந்தோஷத்துக்காகவே தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்ட மனைவி. அதனால் கணவனின் பேச்சைத் தட்டாமல் விருவிருவென்று சமையல்வேலைகளை முடித்தவிட்டு கணவனின் ஆசைப்படி தன்னை அலங்கரித்துக்கொண்டு அவனுக்காக காத்திருக்கம்போது கதவ தட்டப்படும் சப்தம் கேட்டது.
ஓ! அவர்தான் வந்துவிட்டார் என்று எண்ணி துள்ளிக்குதித்து கதவைத் திறந்தவளுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமென்றாலும் இன்னொரு பக்கம் சந்தோஷம். நான்கைந்து தோழிகள் ஒன்றாக தன்னைக் காண வந்தால் எந்த பெண்ணுக்குத்தான் சந்தோஷமிருக்காது!
தோழிகளை பார்த்த சந்தொஷம் ஒரு புறமிருந்தாலும் கணவன் வருகின்ற நேரமல்லவா எனும் பதற்றம் இன்னொருபுறம். அடுப்பங்கறைக்குள் நுழைந்து தோழிகளுக்கு காஃபி கொடுப்பதற்குப் பதிலாக ஃபிரிட்ஜைத் திறந்து கூல் டரிங்ஸை ஊற்றிக்கொடுத்து உபசரித்தாள்.
ரெண்டு பெண்கள் கூடினாலே லேசில் நகர மாட்டார்கள். நான்கு பேர்கள் என்றால் கேட்கவா வேண்டும்! இல்லத்தரசிக்கோ இருப்புக்கொள்ளவில்லை.
பத்து நிமிடம் பத்து மணிபோல் அவளுக்கு நகர்ந்தது. வாசலை எட்டிப்பார்த்தாள். இதோ கணவன் சந்தோஷமாக சிரித்தபடி வாசல்கேட்டைத் திறப்பதைப் பார்த்தவள் கதவருகே நின்ற கொண்டு கணவன் ஸலாம் செல்வதற்குள் முந்திக்கொண்டு ஸலாம் சொன்னாள்.
மனைவியின் வரவேற்பையும் அவளின் ஆடையலங்காரத்தையும் பார்த்த அவன் கண்கள் ஆயிரம் வால்ட் சந்தோஷத்தைக் கொப்பளித்தன். தான் சொன்னதை தட்டாமல் அழகாக அலங்கரித்துக் கொண்டு ஒரு மனைவி தனது கணவனுக்குமுன் நின்றால் எந்த கணவனுக்கும் முகம் மலரத்தானே செய்யும்!
கூடத்தில் தோழிகள் எல்லாம் உட்கார்ந்திருப்பதால் வாசல்கதவைத் தாண்டி உள்ளே நுழைவதற்கு முன்னே வாசலிலேயே கணவனை மடக்கினாள். ஆனால் அவன் மனைவியின் தோழிகளைக்கூட பார்க்காமல் தலையை குனிந்தபடி அறைக்குள் நுழைந்தான்.
‘சரி இப்பவாச்சும் சொல்லுங்க! எங்கே போகப்போறோம்?’
மனைவியை மேலும் கீழும் பார்த்தவன் அவள் காதுகளில் ‘ ....... ....... ’ ஊதினான். [ அப்படி என்னதான் சொன்னான் என்று தெரிந்துகொள்ள ஆசையா? கொஞ்சம் பொறுங்கள்! கடைசியில் தெரிஞ்சுக்கலாம்.] அவ்வளவுதான் அவள் முகம் நாணத்தில் கொப்பளிக்க, ‘என்னங்க இது! நேத்து ராத்திரி தானே அந்த ஊருக்குப் போய்ட்டு வந்தோம்! அதுக்குள்ளே இன்னொரு தரம் போகணுமா? அதுவும் இந்த பட்டப்பகலிலா....’ என்றெல்லாம் கேட்கவில்லை. ஏனெனில் கணவனின் பேச்சைத் தட்டாத, கணவனின் சந்தோஷமே தனது சந்தோஷம் என்று எண்ணி வாழ்பவள் அவள்.
விருவிருவென்று கூடத்துக்க வந்தவள் தோழிகளிடம் சுருக்கமாகப்பேசி அவர்களை மறுபடியும் இன்னொருநாள் விருந்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு அனுப்பி வைத்தாள். சரி, சரி இவள் எங்கேயோ கணவனுடன் வெளியில் செல்லும் அவசரத்தில் இருக்கிறாள் என்று தோழிகளும் எதுவும் கேள்வி கேட்காமல் கிளம்பிச் சென்றனர்.
வாசல் கதவை இறுகத் தாழிட்டு விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தவள் தன்னை முழுமையாக கணவனுக்கு அற்பணித்து அவனை திருப்தியடையச் செய்தாள். எல்லாம் முடிந்தபிறகு கேட்டாள், ‘ஆமாம்! என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு? அதுவும் பட்டப்பகலிலேயே இந்த ஆசையெல்லாம்?’
‘ஏன் பகலிலே.... கூடாதா....?’
‘நான் அப்படியெல்லாம் சொல்லலே! ஆனா இது உங்களைப் பொருத்தவரைக்கும் புதுசா இருக்கேன்னுதான் கேட்டேன்!’ என்றாள்.
‘சொல்றேன்... சொல்றேன்... உன் கிட்டே சொல்லாமே வேறு யார் கிட்டே சொல்றது! என்ன நடந்ததுன்னா.... இன்னைக்கு கம்பெனியிலே போர்டு மீட்டிங் நடந்தது. அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டு அழகான பொம்பளைங்க....’
‘மிச்சத்தை நான் சொல்லட்டுமா...?’
‘ம்’
அந்த ரெண்டு பொம்பளைங்களெப் பார்த்துட்டு அங்கிருந்த ஆம்பளைங்களெல்லாம் ஜொல்லு விட்டாங்க! என்னோட புருஷனுக்கும் ஜொல்லு விடணும் போல ஆசை வந்துச்சோ இல்லையோ உடனே அவருக்கு பொண்டாட்டி ஞாபகம் வந்துடுச்சி.... அதான் பாதிலேயே கம்பெனியிலேந்து ஒடி வந்துட்டாரூ! ஆம் ஐ கரெக்ட்!’
மனைவி தன்னை 100 க்கு 100 சதவீதம் புரிஞ்சி வெச்சிருப்பதைப் பார்த்து அவனுக்கு ஏக சந்தோஷம்.
‘ஆமா! உன்னாலே எப்படி இவ்வளவு கரெக்ட்டா நடந்ததை அப்படியே பார்த்த மாதிரி சொல்ல முடிஞ்சிச்சு?’
‘என் புருஷனைப்பத்தி எனக்குத் தெரியாதா? என் முந்தானைக்குள்ளே உங்களெ நான் டைட்டா முடிச்சுப்போட்டு வெச்சிருக்கும்போது உங்களாலே எப்படி தப்பான பாதைக்கெல்லாம் போக முடியும்? அதுவுமில்லாம நீங்க தானே எனக்கு, நம்ம உயிருக்கும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவுங்க வாழ்க்கையில நடந்த இதே மாதிரி ஒரு சம்பவத்தை நம்ம முதலிரவு அன்னிக்கு என் கிட்டே நீங்க சொன்னதெ என்னாலே எப்படி மறக்க முடியும்?’
சரி, அனைத்துக்கும் முன்மாதிரியாக இறைவனால் அகிலத்துக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லற வாழ்வில் நடந்த அந்த சம்பவம் தான் என்ன?
இதோ:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே தம் மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, தம் தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர் வெளியே வந்து, "பெண் எதிரில் வந்தால் ஷைத்தானின் வடிவில் எதிர்கொள்கிறாள். எனவே, நீங்கள் ஒரு பெண்ணைக் கண்டு மயங்கினால் தம் மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் இருப்பதுதான் இவளிடமும் இருக்கிறது" என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, அஹ்மத்)
அது சரி! வீட்டுக்குள் நுழைந்தவுடன் மனைவியின் காதில் என்னமோ ஊதுனாரென்று சொன்னோமே அது என்னான்னா... "சொர்க்கத்துக்கு போகலாம் வர்றியா'' என்பதுதான்...! மேலோட்டமா பார்த்தா இது கிளு கிளுப்புன்னு எடுத்துக்கிட்டாலும் அவர் சொன்னதுலே உண்மையான அர்த்தமும் இருக்கு! கணவன்-மனைவி அனுபவிக்கிற "அந்த சுகத்தை" சொர்க்கத்துக்கு ஈடான சுகம்னு நாம சொல்றது வாஸ்தம்தான். ஆனா அதுலே இன்னொரு உண்மையும் கலந்திருக்கு என்பதை நம்மில் எத்தனைப் பேர் எண்ணிப்பார்க்கிறோம்? ஆமாங்க! ஒரு கணவன் தப்பான பாதையிலே போய் விபச்சாரம் செஞ்சா அவனுக்கு நரகம்னு சொல்ற நம்முடைய மார்க்கம் ஹலாலான தன் மனைவிக்கிட்டே சுகம் அனுபவிக்கிறதை நன்மையான காரியம்னு சொல்லுகிறதல்லவா?. நன்மையான காரியத்துக்கு கூலி சொர்க்கம் தானே.
ஆக, ஹலாலான மனைவியுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கு இவ்வுலகிலும் சுகம், மறுமையிலும் சுகம் என்பது விளங்குகிறதல்லவா? விளங்கினால் மட்டும் போதுமா? இந்த அற்புதமான சுகத்தை வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நம்மைப்படைத்ததன் நோக்கம் எதுவென்று இறைவன் குறிப்பிடுகிறானோ அந்த இறைவணக்கத்தை - இறை கட்டளைகளை அன்றாடம் சரியாக நிறைவோற்றுவதன் மூலமே, அவனுக்கு நாம் நன்றிக்கடனை செலுத்த முடியும். செய்வோமா?. செய்வோமா என்ன...! செய்தே தீர வேண்டும். இல்லையென்றால் அதைவிட நன்றிகெட்ட தனம் வேறு எதுவுமில்லை.
அனைவருடைய ''இல்லற வாழ்வை''யும் ''நல்லறமாக'' அந்த வல்ல ரஹ்மான் ஆக்கியருள்புரிவானாக, ஆமீன்.

'தாம்பத்தியம்'' ஒரு அழகான வார்த்தை மட்டுமல்ல....


தாம்பத்தியம் ஒரு அழகான வார்த்தை மட்டுமல்ல........
தாம்பத்தியம் என்ன ஒரு அழகான வார்த்தை, இந்த வார்த்தைக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை, அப்படி இருக்கும்போது இந்த தலைப்பில் நான் எழுதினால் எப்படி என்று எனக்குள் ஒரு தயக்கம். ஆனால் கணவன் மனைவி உறவு பற்றி சொல்லும்போது இதைவிட சிறந்த தலைப்பு வேறு இருப்பதாக எனக்கு தோணவில்லை. இந்த ஒரு வார்த்தை பலருக்கு பலவிதமா தெரியலாம். படிக்க படிக்க உங்க வீட்டு கதை போலகூட தெரியலாம்.
என்னடா ஆரம்பத்திலேயே இப்படி குழப்புறாங்க என்று நினைக்காதிங்க. தாம்பத்தியம் கூட தொடக்கத்தில் தம்பதியருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஒரே குழப்பமாகத்தான் இருக்கும். போக போக முத்து எடுக்கத்தான் சம்சார சாகரத்தில் விழுந்திருக்கிறோம் என்பது புரியும். சிலர் எடுப்பது முத்தாக இருக்கும், பலருக்கோ வெறும் சிப்பியாக ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது. முத்தை மட்டும்தான் தேடவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துவிட்டால் ஏமாற இடம் இருக்காது.
இந்த உறுதி இல்லாததால் தான் பலர் இன்று விவகாரத்திற்காக கோர்ட் படி ஏறுகிறார்கள்.
கோர்ட் வரை போக வழி இல்லாதவர்கள் அதாவது கெளரவம் பார்த்துகொண்டு ஏதோ வாழ்ந்து (மனதிற்குள் வெந்து) கொண்டிருக்கிறார்கள்.
பிறப்பு ஒரு முறைதான் இந்த வாழ்க்கையும் ஒருமுறைதான், நம் வாழ்கை ஓட்டத்தை நாம்தான் நன்றாக ஓடி முடிக்கவேண்டும். அதற்கு கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் துணை இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அப்போதுதான் இருவரின் ஓடு பாதையை பின்பற்றி வரும் அவர்களின் வாரிசுகள் வெற்றி பெறமுடியும். அப்படி வெற்றி பெற்ற வாரிசுகளால் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கமுடியும். ஆக ஒரு நல்ல சமுதாயதிற்கு அடிப்படை நல்ல குடும்பம். சமூகம் சரி இல்லை என்று குறை கூறுபவர்கள் முதலில் தங்களது வீடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதை சரி செய்தாலே போதும்.
முரண்பாடுகள் நிறைந்ததுதாங்க வாழ்க்கை. கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே பலவித எதிர்பார்ப்புகள் ஒருவர்மேல் ஒருவருக்கு இருப்பது தப்பு கிடையாது ஆனால் நம்முடைய எண்ணம் போலத்தான் இருக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒரு விதத்தில் ஆர்வகோளாறுதான். ஒரே கருப்பபைஇல் வளர்ந்து பிறந்த குழந்தைகளின் செயல்களிலேயே வேறுபாடு இருக்கிறப்ப வேறுவொரு சூழ்நிலையில் வேற குடும்ப பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த துணையிடம் மட்டும் ஒத்த எண்ணங்கள் இருக்கணும் என்று நினைக்கிறது எப்படிங்க சரியாயிருக்கும்.
நான் தொழிலில் பெரிதாக சாதித்தேன், கம்பெனிஐ உயர்த்த கடினமாக உழைத்தேன் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன், நான் வெற்றியாளன் என்று பெருமையாக சொல்லலாம், ஆனால் அதை மட்டுமே முழு வெற்றியாக கருத முடியாது. உங்கள் குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக நடக்கிறதா என்பதற்கு சரியான பதில் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் பதில் ஆம் என்று இருந்தால் மட்டுமே நீங்கள் முழு வெற்றியாளன். இல்லை என்று இருந்தால் நீங்கள் வெற்றி என்று நினைப்பது வெறும் கானல் நீர்தான். குடும்ப வாழ்வில் நிறைவு பெறாமல் அந்த சந்தோசத்தை உணராமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.......?
பொதுவா எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலே வாழ்க்கை சுவைக்காது. ஆற்றின் நீரோட்டத்தை போல இயல்பா இருக்கணும். பள்ளம் இருந்தால் இறங்கியும் மேடு வந்தால் மேட்டில் ஏறியும் மண்ணின் நிறத்திற்கு ஏற்ப தனது நிறத்தை மாற்றியும் ஒரே சீராக ஓடி கடலில் சேரும் ஆறு போல இருக்க ஏன் சில பெண்களால் முடிவது இல்லை என்று தெரிவது இல்லை.
என் குடும்பம் : 
எனது குடும்பத்தை எடுத்து கொண்டால் எனக்கும் என் கணவருக்கும் பல விசயங்களில் கருத்துகள் ஒத்து போகாதுதான், இருந்தாலும் எது எல்லாம் ஒத்து வரவில்லை என்று உட்கார்ந்து பட்டியல் போட மாட்டோம். ஒரு சில நேரங்களில் என் கருத்தை அவரும் அவர் கருத்தை நானும் ஏற்று கொண்டு விடுவோம். வேற வழி......! குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கனும் என்றால் இந்த மாதிரி small adjustment
செய்துதான் ஆக வேண்டும்!
அப்படி எல்லாம் முடியாது என்று வாதம் செய்து கொண்டிருந்தால் வார்த்தைகள் தடிக்கும், மோதல் அதிகரிக்கும், இறுதியில் நாலு சுவத்துக்குள் பாராமுகம். பெண்களாகிய நாம் வாதத்திற்கு சளைத்தவர்கள் இல்லை, மூச்சுவிடாமல் ஒரு மணி நேரம்கூட பேசுவோம், அத்தனையையும் பொறுமையாக ஆண்கள் கேட்பார்கள் ஆனால் இறுதியாக அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையில் நாம் துடித்து போய்விடுவோம். பதில் சொல்ல தோணாது, அப்புறம் எதற்காக சண்டை என்பதை மறந்து விட்டு என்னை பார்த்து இப்படி சொல்லி விட்டாரே என்று மனம் ஒடிந்து போனதுதான் மிச்சம்.
வேற்றுமையில் ஒற்றுமை :
நான் இந்திய நாட்டில் பல இன, மொழி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் எல்லோரும் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்று இருக்கிறோம் அல்லது ஒற்றுமையாய் இருப்பதுபோல் தோன்றுகிறோம் இல்லையா.....? அதைபோலத்தான் குடும்பமும் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும், வெளியில் இருந்து பார்க்கும்போது ஒற்றுமையாக இருப்பது போலாவது தெரியவேண்டும். அப்போதுதான் மூன்றாம் நபரின் தலையீடு என்பது குடும்பத்திற்குள் இருக்காது. (நானும் கள்ளகாதல் என்ற தலைப்பை எழுத வேண்டிருக்காது) அந்த மூன்றாம் நபர் ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கணவரை பற்றி எப்போதும் குறைச் சொல்லிகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணியிடம், ' குடும்பம்னா அப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க, அவர் நடந்துக்கிற விதம் பிடிக்கலைனாலும் பிடிச்சமாதிரி இருந்துகோங்க, அப்பதான் பிரச்சனை வராதுன்னு' சொன்னதுக்கு அந்த பெண் கொஞ்சங்கூட யோசிக்காம, ' அப்ப என்னை நடிக்க சொல்லுறீங்களா, எனக்கு வேஷம் எல்லாம் போட தெரியாது' , என்று கன்னத்தில அறைந்த மாதிரி சொல்லிட்டாங்க. இப்படி சொல்லும் இவர்கள் யதார்த்தம் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அறிவிலிகள் என்றுதான் சொல்வேன்.
எது நடிப்பு.....? ஷேக்ஸ்பியர் சரியாதான் சொன்னார், 'உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்', இது சத்தியமான வார்த்தை. நம் அன்றாட வாழ்வில் யார்தான் நடிக்கவில்லை, என்னிடம் பேசிய அந்த பெண்ணையும் சேர்த்துதான் சொல்கிறேன். நாம் கடவுளிடம் கூட, "நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்த சோதனை" என்று கேட்கும்போது நடிக்கிறோம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரி மேல் நமக்கு ஏதாவது கோபம் இருந்தாலும் வெளி காட்டிகொள்ளாமல், சிரிச்சிட்டே அவர் வரும்போது எழுந்து வணக்கம் சொல்லும்போது நடிக்கிறோம், பிடிக்காத உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் சந்தோசமாக வரவேற்று நடிக்கிறோம், இதை மாதிரி உதாரனங்களை சொல்லிட்டே போகலாம். முக்கியமா எல்லோரிடமும் நான் ரொம்ப பெர்பெக்ட் என்ற மாதிரி ஒரு முகமூடியை அணிந்துகொண்டு நடிக்கவில்லையா?
அனைவருக்குமே மற்றவர்களின் முன் சிறப்பாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருக்கும். அதேபோல் பெண்களுக்கு, நம் கணவரின் முன்னால் நல்லவிதமாக அவருக்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்று ஏன் தோன்றுவது இல்லை.
குடும்ப பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம் இல்லை. நான் ஏன் முதலில் பெண்களை வைத்து மட்டும் சொல்கிறேன் என்றால் நல்லவிதமாக எடுத்து சொன்னால் அவர்கள் புரிந்து கொண்டு திருத்திகொள்வார்கள், ஆனால் ஆண்கள்..........! 
இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது.

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம். திருமணத்தின் முக்கிய நோக்கமே உடலுறவுதான்.
இறைவனின் படைப்பே விசித்திரமானது. ஆம்! ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன.
அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும்.
அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.
இயற்கையை வென்றது யார் தான்...? அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்
உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும்.
அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.
Thanks to - kousalya