அருள் சுரக்கும் குர்பானி


முழு உலக முஸ்லிம்களாலும் கொண்டாடப்படுவது ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகத் திருநாள். உண்மையிலே இதனை பெரு மைக்குரிய திருநாள் என அழைப்பதும் பொருத்தமாகும்.
ஏனெனில், அத்தகைய பெருமைக்குரிய ஒரு வரலாற்றை அல்லாஹ்வின் தோழர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் உருவாக்கி வைத்துச் சென்றுள்ளார்கள்.
ஆடு, மாடு, ஓட்டகைகளை அறுத்துப் பலியிட்டு ஆண்டு தோறும் செய்யப் படும் குர்பானிஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அந்த மகத்தான தியாகத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
குர்பானிஎனும் பலியிடுதல் அல் லாஹ்வின் சந்நிதானத்தில் அடியார்கள் செலுத்தும் சிறந்த இபாதத்தாக நிர்ண யிக்கப்பட்டு எல்லா நபிமார்களுடைய கூட்டத்தார் மீதும் கடமையாக் கப்பட்டு வந்துள்ளதை பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்து இருந்த ஆடு, மாடு, ஒட்டகைகள் மீது அவன் பெயரைக் கூறும்படி, செய்வதற்காகவே ஒவ்வொரு வகுப்பாகும். நாம் குர்பானிசெய்வ தைக் கடமையாக ஏற்படுத்தி இருந் தோம் (அல்குர்ஆன் 21:34).
இறைவனின் சந்நிதானத்தில் தன் பணிவையும் நன்றியுணர்வையும் மனிதன் ஒளி பெறச் செய்யும் மேலான வணக்க முறை இது என்பது ஓர் உண்மையாரும், அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்கு தனது செல்வத்தை அர்ப்பணிப்பதா லேயே இந்த வணக்க முறை குர்பானி என்று சிறப்பிக்கப் படுகின்றது.
உண்மையில் குர்பானியின் அந்தரங்கத் தாற்பரியம் என்னவெனில், மனிதன் இதன் மூலம் தியாக உணர்ச்சியைப் பெற்று தன் இதயத்தையும், சிந்தனையையும் ஒளிபெறச் செய்ய வேண்டும். தனக்கு ள்ளே ஈமானின் உறுதியையும், இறையச் சத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இதனையே அல்குர் ஆன் கீழ்வருமாறு எடுத்துரைக்கிறது. (இவ்வாறு குர்பானி செய்த போதிலும்) அதன் மாமிசமோ, அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவ தில்லை. உங்களுடைய (பரிசுத்த தன்மை யும்) பக்தியும் தான் அவனை அடையும்’ (அல்குர்ஆன் 22:97).
எந்தக் குர்பானியானது அல்லாஹ்வின் திருப்பொருத்தத் திற்காக மட்டும் நிறை வேற்றப் படுகின்றதோ அதுவே அல்லாஹ் விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கு தகுதி யானதாகும். எண்ணங்களைக் கொண்டே எல்லாச் செயல்களும் கணிக்கப்படும். மனிதன் அவன் எண்ணியதே கிடைக் கும்என்ற நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்கேற்ப குர்பானியிலும் உள்ளத் தின் பரிசுத்தம் முக்கிய மானதாகும்.
புகழைத் தேடி தீர்த்துக் கொள்ளும் குர்பானி, இறைவனிடத்தில் அங்கீகரிக் கப்பட மாட்டாது என்பதை கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது. அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் பய பக்தியு டையவர்களில் உள்ளவர்(களு டைய குர்பானிகளைத் தான்’ (5:27). (தானம் செய்தால்) உங்களுக்குப் பிரிய மான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடையவே மாட்டீர்கள் (குர். 92).
குர்பானி கொடுப்பதற்கான காலம் துல் ஹஜ் மாதம் 10ம் நாள் பெருநாள்த் தொழுகை தொழுததி லிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் பிறை 11, 12, 13 அஸர்த் தொழுகை வரை நிறைவேற்றலாம்.
ஆகவே, உரிய முறையில் குர்பானியைக் கொடுத்து இறைவ னின் திருப்பொருத்தத்தைப் பெறுவோமாக.
மெளலவி எம்.யூ.எம். வாலிஹ் (அஸ்ஹரி)

மனைவியின் மனதைக் கவர 10 வழிகள்!

 
பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்!'என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
 
ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதோ உங்கள் மனைவியின் மனதைக் கவர 10 வழிகள்!
(11-வது ..டி..ப்...ஸா...ன ''வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம்'' படிக்கத்தவறாதீர்கள்)
டிப்ஸ் -1:
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல், அவள் பேசுவது ''உப்பு சப்பில்லாத டப்பா'' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.
நிறைவையும் ''உம்'' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", "ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கும் ஒரே ஊடகம் பேச்சுத்தான்அவளது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கின்றீர்கள் என்பதை அவளின் பேச்சுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே அவள் அறியமுடியும்எனவே நீங்கள் கொஞ்சம் செவிகொடுங்கள்!
டிப்ஸ் -2:
மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை வாங்கிக்கொடுங்கள்[உதாரணம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!
கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
டிப்ஸ் 3:
உண்மையில் வீட்டுப் பணிகளில் கணவனும் கூட இருந்து ஒத்துழைத்தால் உதவியாக இருக்கும் அல்லது நான் வீட்டு வேலை செய்துகொண்டிருக்கும் போது கணவன் குழந்தைகளைக் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் உதவியாக இருக்குமேஎன்றமனைவியின் ஏக்கத்தைக் கணவன் புரிந்துகொள்ள வேண்டும்.
தனது உணர்வை இந்த மறமண்டை புரிந்து கொள்ளவில்லையேஎன்று கோபம் கொந்தளிக்கும் போது அடுத்த கட்டமாக அவளிடமிருந்து வரும் பதில் பாரதூரமாக அமைந்து விடுகின்றது. வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.
டிப்ஸ் -4:
பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.
[செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!
டிப்ஸ் -5
:
மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!
டிப்ஸ் -6
:
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.
தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.
டிப்ஸ் -7
:
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று, "எனக்கு கார்ட் [வாழ்த்து அட்டைசெலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது, அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.
டிப்ஸ் 8:
பெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறிய முடியாதபடிஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்துவிட முடிகிறதுஆனால்ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும்கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்இதனால்குற்றம் சாட்டபடும்போது,பெண்களை விட ஆண்கள் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.
ஆகவே கணவன்மார்கள் மனைவிக்குத்தெரியாமல் செய்கிறேன் என்று ஏட்டிக்குப்போட்டியாக சில காரியங்களை செய்துவிட்டு மனையிடம் மாட்டிக்கொண்டால் திருதிருவெண்று முழிக்க கற்றுக்கொள்ள வேண்டும்கணவன் அப்பாவியாட்டம் திருதிருவென்று முழிப்பதை ரசிக்காத மனைவி நிச்சயமாக உலகில் எவரும் இருக்க மாட்டார்கள்..
டிப்ஸ் 9:
செக்ஸைப் பற்றிப் பேசவும்அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டுஎங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறதுமனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக்காதுபெண்களுக்கு வீட்டில்,வெளியிடங்களில் எனப் பல இடங்களில்பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படியாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக்கிய காரணம்ஆகவே கணவன்மார்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்
டிப்ஸ் 10:
ஆண்கள் சிலபோது பெண்களைச் சீண்டிப் பார்ப்பதற்காக சில வார்த்தைகளை அல்லது செய்திகளை அல்லது வர்ணனைகளைச் செய்யலாம்அதில் விளையாட்டுணர்வுதான் காரணமாக இருக்கும்ஆண்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று பெண்கள் எடுத்துக்கொள்வதில்லைஅவர்கள் அதிகம் சென்டிமென்ட் (உணர்ச்சிபூர்வமாகப்)பார்ப்பார்கள்.
எனவேவேடிக்கையாகப் பேசிய பேச்சுக்கள் அவர்களது நாவில் வேம்பாகவும்நெஞ்சில் வேலாகவும் பாய்ந்து வேதனையை உண்டுபண்ணலாம்எனவே விளையாட்டு விபரீதமாகி விடக்கூடாது என்பதில் கணவனும் கரிசனையாக இருக்க வேண்டும்இதையெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற விரிந்த மனதும் மனைவியிடம் இருந்தாக வேண்டும்.சீண்டுவதில் உண்மையான கோபம் இருக்கக்கூடாது.
சிலபோது மனைவி வேலை செய்து கொண்டிருப்பாள்கணவன் ஓய்வாக இருப்பார் அல்லது பத்திரிகை வாசித்துக்கொண்டிருப்பார்இந்த நேரத்தில் மனைவி அலுத்துப் போய், "தனியாக இருந்து என்னால மாடு மாதிரி சாகமுடியாது!" என்ற தொணியில் தொணதொணப்பாள்.
சிலபோது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில விளையாட்டுக் கணவர்கள், "வயசு போனால் அப்படித்தான்!" என்று ஏதாவது சொல்லும் போது மனைவிக்குப் பத்திக்கொண்டு வரும்அவளும், "நான் மட்டுந்தானே கிழவிஇவர் மட்டும் பெரிய பொடியண்டு நினைப்பாக்கும்!.." என்று தொடரலாம்இதை விளையாட்டாகவோ எடுத்துக் கொண்டால் வினையில்லை.

வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம்
பிழைக்கத்தெரிந்த ஒரு கணவரின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசித்தை அவரது நண்பர் பகிர்ந்து கொள்கிறார்..!
நானும் என் நண்பர் ஒருவரும் சுவராஸியமா பேசிட்டிருந்தோம்அப்போ அவரோட சந்தோஷமான திருமண வாழ்க்கை பத்தி பேச்சு வந்ததுநான் அவர்கிட்ட "உங்களோட வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன..?"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் ரொம்ப பெருமிதத்தோட "புருஷன் பொண்டாட்டி ஒவ்வொருத்தரும் அவங்கவங்க கடமையை புரிஞ்சி நடந்துக்கணும்மத்தவங்க உணர்வை மதிக்கணும்"னு சொன்னார்.
நான் தலையை சொறிஞ்சிக்கிட்டே "கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்"ன்னேன்.
அவர் சொல்ல ஆரம்பிச்சார். "உதாரணத்துக்கு எங்க வீட்டை பொறுத்தவரை பெரிய பெரிய விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன்சின்னசின்ன விஷயங்களில் முடிவு எடுக்கும் பொறுப்பை என் ஒஃய்ப் கிட்ட கொடுத்துடுவேன்"னார்அது மட்டுமல்லஒருத்தர் எடுக்கிற முடிவில் இன்னொருத்தர் தலையிடுறதில்ல..அதனால் எங்களுக்குள் பிரச்சினையே வந்ததில்லை"ன்னாரு..!!
எனக்கு கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவா புரிஞ்சிக்க ஆசைப்பட்டேன்.அதனால் "முடிவு எடுக்கிற விஷயத்தை எப்படி டீல் பண்றீங்கன்னு கொஞ்சம் உதாரணத்தோட சொல்லுங்களேன்"னு கேட்டேன்.
"இன்னும் புரியலையா?!!"ன்னு என்னை கிண்டலா ஒரு பார்வை பார்த்துட்டு சொல்ல ஆரம்பிச்சார். "அதாவதுசின்ன சின்ன விஷயங்கள் உதாரணத்துக்கு என் ஒய்ஃப் நகை வாங்கணுமா வேண்டாமா..?
பட்டுப்புடவை வாங்கணுமாவேண்டாமா..?
வீடு கட்டணுமாவேண்டாமா?
எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வரணுமாவேண்டாமா?
நான் இந்த வேலைல இருக்கணுமாவேண்டாமா?-ன்னு
இப்படி சின்ன விஷயங்களில் என் ஒய்ஃபை முடிவு எடுக்க விட்டுடுவேன்...!!
எனக்கு ஷாக்காயிடிச்சி.!! இதெல்லாம் சின்ன விஷயமா..?
அவரை அதிர்ச்சியா பார்த்துக்கிட்டே... "சரி..அப்ப நீங்க எதைப்பத்தி தான் முடிவு எடுப்பீங்க..?!!"-ன்னு கேட்டேன்.
அவர் என்னை ஒரு மாதிரியா பார்த்துக்கிட்டே.. "நான் எடுக்கிற முடிவுகள் எல்லாம் இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் இருக்காது.
உதாரணத்துக்கு இப்ப அதிகமாகிக்கிட்டு வர்ற குளோபல் வார்மிங்கை குறைக்கிறது எப்படி?,
அமெரிக்கா இரான் மேல போர் தொடுக்கணுமா வேணாமா?,
பாக்கிஸ்தானை எப்படி கண்ட்ரோல் பண்றது?,
அடுத்த ஒலிம்பிக்ல இந்தியா எத்தனை பதக்கம் வாங்கணும்?-னு இப்படி பெரிய பெரிய விஷயங்களை பத்தி தான் நான் முடிவு எடுப்பேன்.
இதில் பெரிய ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா..? நான் எடுக்கும் எந்த முடிவிலும் என் ஒஃய் தலையிடுவதே இல்லை..
இப்ப புரியுதா எங்க சந்தோஷமான வாழ்க்கையின் சீக்ரெட்..?!!! "ன்னார்.!!
அய்யோ...எனக்கு தலையெல்லாம் சுத்துது.. யாராவது என்னை கைத்தாங்கலா பிடிச்சி உட்கார வச்சி கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்.. ப்ளீஸ்..!!

மனைவியின் அருமை அறிய முதுமை வரை தாமதிக்கணுமா?

70 வயதிருக்கும் அவருக்கு! அவரது மனைவிக்கு அவரைவிட வயது சற்று குறைவாக இருக்கலாம். வாழுகின்ற காலங்களில் மனைவியை எடுத்ததெற்கெல்லாம் வசைபாடிய அவர் கடைசீ காலம் நெருங்கியபோது மனைவியின் அருமை அப்போதுதான் புரிந்துகொண்டவர்போல் புலம்பாத குறையாக கொட்டித்தீர்த்தார்.../
இவர்கள் இருவருமே மறுவுலகப்பயணம் மேற்கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் அந்த வயதான தம்பதிகள் இருவரும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் அழுத்தமாக பசுமையாக மனதில் தங்கிவிட்டது.
பெரும்பாலான ஆண்களுக்கு மனைவியின் அருமை என்னவென்பதை புரிந்துகொள்வதற்குள் அவர்களின் வாழ்க்கையே முடிந்து போய்விடுகிறது.
வாழுகிற காலத்தில் மனைவியின் அருமை புரியாமல் மடிவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இறைவன் வழங்கிய மேன்மையான இன்னும் சொல்லப்போனால் ஒரு மகத்தான அருட்கொடையின் மதிப்பை விளங்காதவர்களாக வாழுகிற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?
இவ்வுலகில் வாழும்போது அல்லாஹ் வழங்கிய மனைவி என்னும் பொக்கிஷத்தின் அருமையையும் பெருமையையும் உதாசீனப்படுத்தியவர்கள் மறுமையில் ஹூருல் ஈன்கள் எனும் சுவனத்து பேரழகிகளை கற்பனையில்கூட நினைத்துப்பார்க்க அறுகதையுடையவர்களா? சொல்லுங்கள்! 
'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' எனும் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு உங்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். 
ஒரு முதியவர் முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றி, உள்ளம் சோர்வு அடைய சோஃபாவில் ஓய்வாக சாய்ந்திருக்கிறார். பல கற்பனைகள், கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டோமோ!
முதுமை நம்மை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே... இப்படி பல எண்ணங்கள் எல்லாம் அவர் மனதில் இழையோடிக்கொண்டே இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள் லேசாக மூடிய நிலையில் இருந்தார்.
அவரின் குளிர்ந்த கை மீது மற்றவரின் உள்ளங்கை வைக்கப்படுவதனை உணர்கின்றார். அது அவரது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு.
அந்த நிலை நீடிக்க விரும்பினார்.
அவர் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது, முதியவரின் கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை முதியவரின் கன்னம்வழி வளர்ந்த கண்ணீரை துடைத்து விட்டது. அந்த அவர் வேறு யாராக இருக்க முடியும். அவரது மனைவியைத்தவிர!
காலமெல்லாம் உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது அதிகமாகவே உணர்கின்றார் முதியவர்.
"நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன்" என அவரது வாய் புலம்ப அந்த மூதாட்டி அவரது வாயினை பொத்தி ''எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது'' என்று அவரை அமைதி படுத்துகிறாள்.
அந்த முதியவர் எண்ணிப்பார்க்கிறார்... ''காலமெல்லாம் நான் அவளுக்கு கொடுத்த ஆறுதல்... !''
தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி தந்த ஆறுதல் வார்த்தை... மிக்க சக்தி வாய்ந்ததாக அவருக்குத் தெரிந்தது. அவர் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது.
இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்றா இரண்டா....
இதோ ஒரு உண்மைச் சம்பவம்:
70 வயதிருக்கும் அவருக்கு! அவரது மனைவிக்கு அவரைவிட வயது சற்று குறைவாக இருக்கலாம். வாழுகின்ற காலங்களில் மனைவியை எடுத்ததெற்கெல்லாம் வசைபாடிய அவருக்கு கடைசீ காலம் நெருங்கியபோது மனைவியின் அருமை அப்போதுதான் புரிந்துகொண்டவர்போல் புலம்பாத குறையாக கொட்டித்தீர்த்தார். 'என் மனைவி மிகவும் நல்லவள் அவளை நான் எவ்வளவு திட்டியிருக்கின்றேன். ஆனால் என் சுடுசொல்லைத் தாங்கிக்கொண்டு அவள் எப்படி என்னுடன் வாழ்க்கை நடத்தினாள் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது... அவள் ரொம்ப ரொம்ப நல்லவள். நான் தான் எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டு என் மனைவியை கண்டபடி மோசமாக திட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்.' என்றார், அவரைக் காணச்சென்ற என்னிடம்.
அவரது மனைவியோ ''அவரை சமாதானப்படுத்துங்கள், வருவோர் போவோரிடத்தில் எல்லாம் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். பலமுறை என்னிடம் மன்னிப்பு கேட்டவண்ணமாகவே இருக்கிறார்... அவரை எப்படியாவது சமாடானப்படுத்துங்கள்!'' என்று என்னிடம் கேட்டுக்கொண்டது இன்றும் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இவர்கள் இருவருமே மறுவுலகப்பயணம் மேற்கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் அந்த வயதான தம்பதிகள் இருவரும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் அழுத்தமாக இன்றும் இன்னும் பசுமையாக மனதில் தங்கிவிட்டது.
பெரும்பாலான ஆண்களுக்கு மனைவியின் அருமை என்னவென்பதை புரிந்துகொள்வதற்குள் அவர்களின் வாழ்க்கையே முடிந்து போய்விடுகிறது.
ஏனெனில் திருமணம் முடித்தவுடனேயே மனைவியை சம்பளமில்லாத வேலைக்கரியாக என்று சொல்வதைவிட அடிமையாகக் கருதி வாழ்க்கையை.../ இல்லறம் என்றால் என்னவென்பதையே புரிந்துகொள்ளாமல் வாழ்கின்ற ஆண்களே அதிகம்! அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கிய பொருள்களிலேயே மிகச்சிறந்த பொருள் நல்ல மனைவிதான் என்பதை இறைவன் தனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் எடுத்துச்சொன்னதை நம்மில் எத்தனைப்பேர் விளங்கி அதன்படி வாழ்க்கை நடத்துகிறோம்.
வாழுகிற காலத்தில் மனைவியின் அருமை புரியாமல் மடிவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இறைவன் வழங்கிய மேன்மையான இன்னும் சொல்லப்போனால் ஒரு மகத்தான அருட்கொடையின் மதிப்பை விளங்காதவர்களாக வாழுகிற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? சிந்தித்துப்பாருங்கள்.
இவ்வுலகில் வாழும்போது அல்லாஹ் வழங்கிய மனைவி என்னும் பொக்கிஷத்தின் அருமையையும் பெருமையையும் உதாசீனப்படுத்தியவர்கள் மறுமையில் ''ஹூருல் ஈன்கள்'' எனும் சுவனத்து அழகுக் கன்னிகளை கற்பனையில்கூட நினைக்க முடியுமா? அதற்கான தகுதிகள்தான் அவர்களுக்கு உண்டா?சொல்லுங்கள்! ''உலகில் நீ வாழும்போது நான் உனக்குத்துணையாக கொடுத்த ஒரு அற்புதமான அருட்கொடையான மனைவியின் மதிப்பை விளங்காத உனக்கு இங்கு சுவனத்தில் மட்டும் ஹூருல் ஈன்கள் கேட்குதோ?!'' என்று இறைவன் நம்மிடம் கேட்டால் எவ்வளவு கைசேதம்... எண்ணிப்பாருங்கள்.
இனியாவது வாழ்கையை சீர்படுத்திக்கொள்ளுங்கள். முதுமைக்கு முன்பாகவே மனைவியின் அருமையை அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.
'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' எனும் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு உங்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம்மைப்படைத்த அந்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்விடன் ''எல்லோருடைய இல்லறமும் நல்லறமாக, துஆச் செய்யுங்கள்.'' ஏனெனில் மறைவானவற்றின் சாவிகள் அனைத்தும் அவனிடமே உள்ளன. ''துஆ'' நமது ''தக்தீரை''(விதியை)க்கூட மாற்றும் வல்லமை படைத்தது. என்பதை மறந்துவிடாதீர்கள். 
அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம்! ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!!



நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று
மாதங்களுக்கு முன்பே இப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஏனெனில், ஹஜ்ஜின் போது அதிகம் நடக்க வேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்தி லிருந்து வெகுதூரம் நடக்க வேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ) எல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய எண்ணும் ஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில் ஒரு தவாஃப் முடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும்.
ஆனால் – ஒவ்வோர் ஆண்டும் ஹாஜிகள் மிகவும் கஷ்டப்படுவது ‘நடக்கும்’ விஷயத்தில்தான்! காரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற் கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள முஸ்லிம்கள் நடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்.

2.ஹாஜிகளே! உங்களுடைய கால்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் ஹஜ்ஜின் போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சாதாரணமாக காலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின் போது பயன் படுத்துங்கள். புதுச் செருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.

3.ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்திலிருக்கும் ஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்ற ழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே நீண்ட தொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று! ஹஜ்ஜில் ‘மெதுவாக’ நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

4.பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல நாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள் தினமும் அதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது முக்கியமானதுதான்! எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில் (துல்ஹஜ் 8 முதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு அடைந்து விடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


6.பெண்களில் சிலர் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக சில ஹார் மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப் பட வேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன் படுத்தலாம். அதுவும் பெண் மருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.

ஹாஜிகள் பலர் உயர் ரத்த அழுத்தம் (BP) நீரழிவு முதலான நோயுள் ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள் வதோடு மட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப் பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார் குழுக்கள் ‘சிறப்பு உணவினை’ இது போன்ற நோயாளி களுக்குத் தயாரிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஹாஜிகள் உணவு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கியமான ஒரு நோய் என்னவெனில் ‘சளி தொந்தரவு’ சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் ‘சளி தொந்தரவு; ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஹஜ் காலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். இதனை Community acquired Pneumonia என்று அழைப்பார்கள். அதாவது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த மருந்து ‘முன்னெச்சரிக்கை’ (Prevention) தான். முகத்தில் ‘முகமூடி’ அணிந்து கொள்வது இந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி. அறைகளிலும், ஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே ஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து சாப்பிடுவது மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பது அவசியம்.

இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் இல்லை. எனவே கவலைப்படாமல் இம்மையங்களை அணுகுங்கள்! தனியார் குழுக்களில் பல மருத்துவர்களை அழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக் கின்றன. எனவே ஹாஜிகள் கவலைப்படத் தேவையில்லை.

முஸ்லிம்களே உஷார்! போலிக்குர்ஆன்!

குர்ஆனுக்கெதிராக சூழ்ச்சிகள்.
இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை அதன் தூய கொள்கைகளையும் வேத நெறிகளையும் தகர்க்க பல் வேறு சூழ்ச்சிகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்தே வந்துள்ளன.
நபி பெரமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் எதிர்த்தவர்கள் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல முயற்சிகளை பல் வேறு வடிவங்களில் மேற் கொண்டனர். அனைத்திலும் தோல்வியே கண்டனர். இருந்தும் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லையே அது மிகவேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறதே என்ற ஆவேசம் குறையவே இல்லை.
கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி பல முனைத் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

அல்குர்ஆனை அழிக்க பெரும் சதி!
முஸ்லிமகளை வழிநடத்தும் அருள்மறை அல்குர்ஆனை அழித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்று பகற்கனவு கண்டு வருகின்றனர்.அதற்காக,
ஷீஆயிஸம்,காதியானியிஸம்,சூபித்துவம்,தரீக்காயிஸம் போன்ற பல இயக்கங்களை தோற்றுவித்தும் அது முடியாமற் போயிற்று.

பல இலட்சம் பிரதிகள்!
குர்ஆனிலுள்ள யூதர்களுக்கெதிரான வசனங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு இசைவான வசனங்களை சேர்த்து பல இலட்சம் பிரதிகளை அச்சடித்து ஆப்ரிக்க நாடுகளிலும்,ஆசிய நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வினியோகித்தனர். கூலிப்படையினரின் சூழ்ச்சிகளில் அகப்பட்ட அப்பாவிமக்கள் யாது செய்வதென அறியாது திகைத்தனர்.
இந்தோனேசியாவில் ”மேடான்” என்ற நகரில் மட்டும் 25000 பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இந்தத் தகவலை நேரிலே கண்டு நாம் கூறியதும், ‘ பல நாடுகளில் விற்பனைக்காகவும், வினியோகத்திற்காக வுமிருந்த பிரதிகளை ‘ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா’ என்ற உலக இஸ்லாமிய அமைப்பு அவற்றை வாங்கி தீ வைத்துக் கொளுத்தின.

அமெரிக்கப் போலிக் குர்ஆன்
யூதர்களைத் தெடர்ந்து அமெரிக்காவின் சதிகள் தொடந்தன. இஸ்லாத்திற்கெதிராக பல்வேறு புத்தகங்களையும், இணைய தளங்களையும் வெளியிட்டும் ஆத்திரம் அடங்கவில்லை. ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற போலி முஸ்லிம்களை வைத்து பல நூல்களையும் கதைகளையும் எழுதினர்.
 எஃகு போன்ற உறுதிமிக்க கொள்கைப்பிடிப்புமிக்க முஸ்லிம்களை எந்த வகையிலும் அசைக்க முடியவில்லை. நாடகம் தொடர்ந்தது! தங்கள் வேதங்களிலே விரும்பியவாறு எழுதி விளையாடியது போன்று குர்ஆனிலும் விளையாட மீண்டும் தொடங்கியுள்ளனர். பல யூத கிறித்தவ அறிஞர்களின் ஆதரவோடும் ஆக்கங்களோடும் புதிய குர்ஆன் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதோ ! படியுங்கள்.!

போலிக்குர்ஆன்!
பெயர் :  ” The True Furqan”  (உண்மைக் குர்ஆன்)
ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் சூது நிறைந்த ஒரு புதிய குர்ஆனை அமெரிக்கர்கள் உருவாக்கி ‘தி ட்ரூ ஃபுர்கான்’ – உண்மையான குர்ஆன்- என்ற பெயரில் குவைத் பாடசாலைகளில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் ‘சாத்தானின் வசனங்கள்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகவலை ‘அல் புர்கான்’ வார இதழ் கண்டுபிடித்து அதை வெளியிட்டுள்ள இரு புத்தக வெளியீட்டாளர்கள் பெயர்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. ‘ஒமேகா-2001, ஓய்ன் பதிப்பகம்’ ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தான் இந்த கைங்கரியத்தை அரங் கேற்றியுள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்ல ‘ இது 21-வது நூற்றாண்டின் தலை சிறந்த குர்ஆன்’ எனவும் விமர்சனம் செய்துள்ளது.
366 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அரபி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படுகிறது. இதனை குவைத் தனியார் ஆங்கில பாடசாலைகளில் வினியோகமும் செய்துள்ளனர்.
இந்நூலில் 77அத்தியாயங்களே உள்ளன.அதில் பாத்திஹாவுடன் அல்ஜனா, இஞ்சீல் என இரு புதிய அத்தியாயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன.
அத்தியாயத்தின் காப்பு வாக்கியமான பிஸ்மில்லாஹ்வுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் முக்கடவுள் கொள்கையைக் குறிக்கும் (Trinity-திரீத்துவம்)  ‘முக்கடவுள்களின் அருளால்’ என்ற நீண்ட வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புதிய குர்ஆன் உலகின் எல்லா இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அவர்களின் உணர்வுளை சீண்டியுள்ளது.

நச்சுக்கருத்துகளை திணித்துள்ளனர்.
அது மட்டுமல்ல, அதில்
1. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது கூடாது.(அதாவது பலதாரமணம் கூடாது)
2. விவாகரத்துக்கு அனுமதி கிடையாது.
3. நடைமுறையில் உள்ள சொத்துரிமை சட்டங்களை மாற்றி உயில் மூலம் விரும்பியவருக்கு சொத்துரிமை வழங்கலாம்.
4. இஸ்லாத்தில் ஜிஹாத்- மார்க்கப்போர் ‘ஹராம்’ தடைசெய்யப் பட்டுள்ளது.மேலும்,
அல்லாஹ்வின் வல்லமையை விமர்சனமும் செய்து பல நச்சுக் கருத்துக்களையும் திணித்து ‘மூன்று டாலர் விலைதான்’ என மலிவு விலையிலும் வெளியிட்டுள்ளது.

அல்லாஹ்வின் பாதுகாப்பு
கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை உலகளாவிய அளவில் செய்தாலும் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனை அணைத்துவிட முடியாது! அழித்துவிட முடியாது! ‘அதை நாம் பாதுகாத்தே தீருவோம்’ என்ற உத்தரவாதத்தை அதை அருளிய நாயனே நமக்குத் தந்துள்ளான்.

இதோ அந்த உத்தரவாதம்
உலகப்பொது மறையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
                                                           
َّ    إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ                                 
நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை அருளினோம்! மேலும் நாமே இதை பாதுகாப்போம். (الحجر: ٩அல்ஹுஜர் 15:09)
يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُون                                                                  
الصف: ٨)
நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் ஒளியை தங்களின் வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை (அணைக்கவிடாமல்) பூரணமாக்கவே விரும்புகிறான். (அஸ்ஸஃப் 61:08)

முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!
இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ? நமது இறையருள் வேதமாம் உலகப்பொது மறை அல்குர்ஆனின் மாண்பினைப் புரியாது அதை துணியில் சுற்றி ஏதோ வீட்டு மாடத்தில் கைக்கெட்டா விட்டத்தில் தூக்கி வீசியதன் விளைவு தான் இன்று நமது எதிரிகள் நம் குர்ஆனோடு விளையாடத் துவங்கியுள்ளனர்.


நன்றி-- http://albaqavi.com

கணவன் அமைவதெல்லாம்..!

 
ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பது, இனி உங்களது முழு உலகமும் அவள் தான் என்றாகி விடுகின்றது. நீங்கள் மரணமடையும் காலம் வரைக்கும் அவள் தான் உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய பங்காளியாகவும், உங்களது தோழமைக்குரியவளாகவும், இன்னும் சிறந்த நண்பியாகவும் அவள் உங்களுடன் வலம் வரப் போகின்றாள்.

அவள் உங்களது ஒவ்வொரு நிமிடத்தையும், மணி நேரத்தையும், நாளையும், மாதத்தையும், ஏன் முழு வாழ்நாளையும் பகிர்ந்து கொள்ள வருகின்றாள். உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ள வருகின்றாள், உங்களது வெற்றியிலும் தோல்வியிலும் அவள் பங்கெடுத்துக் கொள்கின்றாள், நீங்கள் கனவு காணும் பொழுது அதனை நனவாக்கவும், நீங்கள் அச்சப்படும் பொழுதும் ஆறுதல் கூறவும் அவள் விரைகின்றவளாக இருப்பாள்.


நீங்கள் நோய்வாய்படுகின்றீர்கள் என்று சொன்னால், உங்களது வலியும் வேதனையும் அவளையும் நோவினைக்கு உள்ளாக்குகின்றது. ஒரு தாதியைப் போல ஏன் அவளை விடவும் அதிக உரிமை எடுத்து உங்களுக்குச் சேவகம் செய்ய விரைகின்றவள் அவள் தானே..!


உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றதென்றால், உதவுவதற்காக விரைகின்ற முதல் நபர் அவளாகத் தானே இருப்பாள். அவளால் எந்த அளவு முடியுமோ அதுவரைக்கும் உதவக் கூடியவளாகவும், அதில் தன்னலம் கருததாதவளாகவும் இருக்கின்றவள் அவள் தானே..!


உங்களைப் பற்றி ரகசியம் ஒன்று உண்டென்றால், அவளைத் தவிர வேறு யாரால் அதனைப் பாதுகாக்க முடியும். இன்னும் உங்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை தேவைப்படுகின்றதெனில், அவளது ஆலோசனைகள் உங்களது வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு மிகச் சிறப்பான ஆலோசனையை அவளால் தானே வழங்க முடியும்.


அவள் எப்பொழுதும் உங்களைத் தொடரக் கூடியவள், உங்களுடனேயே இருக்கக் கூடியவள். நீங்கள் கண் விழிக்கும் பொழுது, காலையில் நீங்கள் பார்க்கும் முதல் நபர் அவளாகத் தானே இருப்பாள், இரவிலும் பகலிலும் உங்களது உணர்வுகளுடன் உறவாடி வரக் கூடியவளும், நீங்கள் அவளைப் பிரிந்திருந்தாலும், அவளது உடல் தான் பிரிந்திருக்குமே ஒழிய உள்ளம் உங்களுடன் தானே ஒட்டிக் கொண்டிருக்கும்.


அவள் எப்பொழுதும் உங்களைப் பற்றிச் சிந்திக்கக் கூடியவளாக, உங்களுக்காக உடலாலும் மனதாலுமு;, ஆன்மாவாலும் பிரார்த்திக்கக் கூடியவளாகவும், இன்னும் நீங்கள் படுக்கைக்குச் செல்லும் முன் இறுதியாக உங்களது கண்கள் பார்க்கக் கூடியதும், அவளாகத் தானே இருக்கும். இன்னும் நீங்கள் உறங்கினாலும் உங்கள் கனவுகளில் கூட உங்களைத் தொடரக் கூடியவளும் அவள் தானே.


சுருங்கச் சொன்னால், அவள் தான் உங்களது முழு உலகமுமே.., நீங்கள் தான் அவளது முழு உலகமும்..!

இறைவனது திருமறையாம் குர்ஆனைப் போல கணவன் மனைவியினுடைய உறவை வர்ணிக்கக் கூடியதொரு வார்த்தையை நான் கண்டதில்லை. இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (2:187)

நிச்சயமாக, தம்பதிகள் இருவரும் ஒருவர் மற்றவருக்கு ஆடை தானே, ஆடையானது ஒருவரை எவ்வாறு பாதுகாக்கின்றதோ அதனைப் போலவே..! ஏனெனில் ஆடையானது பாதுகாப்பு வழங்குகின்றது, அவனுக்கு இதத்தைத் தருகின்றது, அவனைப் போர்த்திக் கொள்கின்றது, அவனுக்கு உதவிகரமாக இருக்கின்றது, அவனுக்கு அழகையும் கொடுக்கின்றது, மனிதன் என்ற உயர்ந்த அந்தஸ்தையும் கொடுக்கின்றது.


சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், பனிபடர்ந்த அந்த அலாஸ்கா பெருவெளியில் நீங்கள் ஆடையின்றி உலாவ முடியுமா? அந்த அலாஸ்காவில் உலா வருகின்ற ஒருவனுக்கு ஆடையானது எந்தளவு பாதுகாப்பையும், இதத்தையும் வழங்கி, அவனுக்கு உதவிகரமாக இருப்பது போலவே ஒரு கணவனுக்கு அமைகின்ற மனைவியும் அத்தகைய தன்மைகளை வழங்கக் கூடியவளாக இருக்கின்றாள்.

ஒரு கணவனுக்கும் இன்னும் மனைவிக்கும் இடையே உள்ள உறவானது மனித நாகரீகத்தில் உள்ள மற்ற உறவுகளை விட மிக்க மேலானது. அன்பும், பாசமும், நெருக்கமும், கருணையும், இன்னும் உங்களுடன் இருக்கும் பொழுது அவள் அடைகின்ற பரவசமிக்க உணர்வுகளை வார்த்தைகளால் வடித்து விட முடியாது. மனிதனால் ஓரளவே அந்த உணர்வுகளை வகைப்படுத்த முடியும். ஆனால் நம்மைப்படைத்த இறைவன் அதனை இவ்வாறு நமக்கு விளக்கிக் காண்பிக்கின்றான் :

அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; (16:72)

படைத்த வல்லோனாம் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலாவினால் மட்டுமே தம்பதிகளிடையே இத்தகைய நெருக்கத்தையும், உணர்வுப்பூர்வமான அதிசயக்கத்தக்க அன்பையும் வழங்கி, தனது கருணையை அவர்கள் மீது பொழிய முடியும்.

இன்னும் இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான், வானங்களிலும், பூமியிலும் இறைவன் இருக்கின்றானா என்ற அத்தாட்சியை நீங்கள் தேடக் கூடியவர்களாக நீங்கள் இருந்தால், உங்கள் மனைவியர்களின் இதயத்தில் நான் விதைத்து வைத்திருக்கின்ற உணர்வுகளை ஆராய்ந்து பாருங்கள், அங்கும் உங்களுக்கு அத்தாட்சிகள் விரவிக் கிடக்கின்றன என்று கூறுகின்றான் :

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மனிதர்களது மனது என்பது நிலையானதல்ல என்பதை இறைவன் அறிந்தவன், மனிதர்களது மனமானது அடிக்கடி மாறக் கூடியது, அது வாழும் நாளில் பல நேரங்களில் பலவீனங்களைச் சந்திக்கக் கூடியது. அதில் உலா வரக் கூடிய உணர்வுகள் நேரத்திற்கு நேரம் மாற்றமடையக் கூடியது. இருவருக்குமிடையே இருக்கின்ற பரஸ்பர அன்பானது சில நேரங்களில் மிகுதியாகவும், சில நேரங்களில் வெறுமையாகவும் காணப்படும். உறவுகளைச் சரிவரப் பேணவில்லை என்றால், ஊடல்கள் மழிந்து திருமண உறவில் விரிசல் ஏற்படக் கூடும். எனவே, அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். திருமணம் செய்து விட்டவுடன் தம்பதிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கி விடும் என்று உறுதியாகக் கூற முடியாது, இறுதி வரை மகிழ்ச்சி உங்களது இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால், தம்பதிகள் இருவருடைய பரஸ்பர ஒத்துழைப்பினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு மரமானது செழிப்பாக வளர வேண்டுமெனில், அது ஊண்றப்பட்டிருக்கின்ற மண் செழிப்பாக இருக்க வேண்டும், முறையான பராமரிப்புடன், தண்ணீர் மற்றும் உரங்களையும் சரியான விகிதத்தில் வழங்கினால் அந்த மரம் செழிப்பாக வளர்வதோடு, எதிர்பார்க்கின்ற பலனையும் கொடுக்கும். அது போலத் தான் குடும்ப அமைப்பும்..!


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிமார்களுடன் எத்தகைய வாழ்வை வாழ்;ந்திருக்கின்றார்கள் என்பதை அறிவீர்களா?! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தியுள்ளார்கள். ஒருமுறை பாலைவனப் பகுதிக்கு தன்னுடைய குடும்பத்தினர்களுடன் சென்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னுமொரு முறை இருவருக்கிமிடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில், அன்னையவர்கள் அதிக எடை போட்டதன் காரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த முறை வெற்றி பெற்றார்கள்.


அறிந்து கொள்ளுங்கள்..! ஒருமுறை எத்தியோப்பிய நாட்டு வீரர்கள் வீர விளையாட்டு விளையாடிய பொழுது, அதனைக் காண தனது மனைவியர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றுள்ளார்கள்.

அவர்கள் மீது கணவன் காட்டுகின்ற அன்பு, இன்னும் நான் உன் மீது அன்பு வைத்திருக்கின்றேன் என்று அவர்களுக்கு உணர்த்தும் பொழுது, இருவருக்குமிடையே உள்ள உறவில் விரிசல் விழுவது தவிர்க்கப்படுகின்றது. கணவனாகிய நீங்கள் அவள் மீது காட்டுகின்ற பாசத்திற்கும், நேசத்திற்கும் கூட இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குகின்றான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :
அல்லாஹ்வினுடைய திருப் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஒருவர், தனது மனைவிக்கு ஒரு கவளம் உணவு ஊட்டினாலும், அதற்காக அவர் வெகுமதி அளிக்கப்படுவார்.

மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டுவது கூட நன்மையைப் பெற்றுத் தருமா என நீங்கள் மிகவும் மலிவாகக் கருதி விடாதீர்கள். அவளுக்காக அவள் பயணம் செய்யக் கூடிய கார்க் கதவைத் திறந்து விட்டு அவளை உட்கார வைப்பது கூட உங்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரக் கூடியதே..!


ஒட்டகத்தில் ஏறுவதற்காக தனது மனைவிமார்களுக்கு தனது பாதத்தை ஒட்டகத்திலிருந்து இறக்கிக் கொடுத்து, அவர்கள் ஒட்டகத்தில் மீது ஏறிக் கொள்வதற்கு உதவி இருக்கின்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

தொழுகையில்..! நீங்கள் வீட்டில் அமர்ந்து தொழக் கூடிய சந்தர்ப்பங்களில் இருவரும் ஒரே நேரத்தில் தொழ முயற்சி செய்யுங்கள். இறைவன் முன்னிலையில் நீங்கள் இணைந்து நிற்பது உங்களது உறவுக்கு சாட்சியாக இருப்பதோடு, உங்களது நெருக்கத்தையும் அது இறுக்கமாக்கி வைக்கும். அல்லாஹ்வின் அருட்கொடைகளின் காரணமாக, உங்களது இல்லத்தில் அருட்கொடைகளும் அமைதியும் பூத்துக் குலுங்கும்.

அறிந்து கொள்ளுங்கள்..! தம்பதிகளில் யார் இரவுத் தொழுகைக்கு எழுந்து தொழுகின்றார்களோ, அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நற்செயதி வழங்கியிருக்கின்றார்கள். இன்னும் தம்பதிகள் இருவரில் யாராவது ஒருவர் முதலில் எழுந்து, மற்றவரை எழுப்ப வேண்டும் என்றும், இயலவில்லை எனில் அவள் அல்லது அவர், ஒருவர் மற்றவரின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாவது எழுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.


கணவன்மார்களே..! உங்களது மனைவியுடன் எப்பொழுது சொல்லாலும், செயலாலும் நல்ல மனிதராகத் திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

அவளுடன் இதமாகப் பேசுங்கள், சிரித்து மகிழுங்கள், அவளுடைய ஆலோசனையைக் கேட்டுப் பெறுங்கள், அவளது கருத்தையும் செவி தாழ்த்திக் கேளுங்கள், முடியுமானவரை உங்களது நேரங்களில் ஒரு பகுதியை அவளுக்காகவே ஒதுக்கி அவளுடன் தனித்திருங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களின் மனைவியரிடத்தில் சிறந்தவர் தான்”, என்று கூறியுள்ளார்கள்.

இறுதியாக, பொதுவாக ஒருவர் மற்றவரிடம் நான் இறுதிவரை உன் மீது அன்பு செலுத்துவேன், மரணம் தான் நம்மைப் பிரிக்கவல்லது என உறுதிப் பிரகடனம் செய்து கொள்வது நல்லது. இந்த உறுதிப்பிரகடனத்தைச் செய்து கொள்வது நல்லது என்பதை விட அது மிகச் சிறந்தது, இது கூட நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அன்பு செலுத்தவதற்குப் போதாது என்று கூடச் சொல்லுவேன். அதனை நீங்கள் முழுமைப்படுத்த வேண்டுமென்றால், அவள் எதன் மீது அன்பு வைத்திருக்கின்றாளோ அதன் மீது நீங்களும் அன்பு செலுத்தாத வரை, உங்களது பிரகடனம் முழுமை பெறாது.


அவள் அன்பு செலுத்துகின்ற அவளது குடும்பத்தின் மீது நீங்கள் அன்புடையவராக இருக்க வேண்டும். இன்னும் உங்களது வீட்டிற்கு விருந்தாளியாக வருகை தரக் கூடிய அவளுடைய குடும்பத்தவர்களை புறக்கணிக்கக் கூடிய, உதாசினமாக நினைக்கக் கூடிய அநேகமானவர்களைப் போல நீங்களும் ஆகி விடாதீர்கள். உனது குடும்பத்தவர்களையும் எனக்குப் பிடிக்கவில்லை, ஏன் உன்னையும் பிடிக்கவில்லை என்று கூறக் கூடிய மோசமான நபர்களைப் போல நீங்களும் ஆகி விடாதீர்கள்.


ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள நேசத்தைப் பிரிக்கவல்லது மரணமே..! என்று நினைப்பது கூட தவறானது, ஏனெனில் நாம் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் மீது இறைவிசுவாசம் கொண்டுள்ளவர்கள். மரணம் என்பது இந்த உலக வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியாக இருக்கலாம், ஆனால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள நேசத்திற்கு முடிவு என்பதே கிடையாது என்பதை இறைவசனம் இவ்வாறு மெய்ப்பிக்கின்றது :


நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). (43:70)


இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்குமிடையே நிலவிய அன்பும் பாசமும் 25 வருடங்களாக அறுந்து விடாத நூலைப் போலத் தொடர்ந்தன, அவர்கள் விரும்பியதையே, அண்ணலார் (ஸல்) அவர்களும் விரும்பியவர்களாகவும், இன்னும் அண்ணலார் (ஸல்) அவர்கள் விரும்பியதையே அன்னையும் விரும்பியவர்களாகவும் அவர்களது வாழ்க்கைப் பயணம் இனிமையாகவும், அன்பாகவும், இதமாகவும் சென்றது.


இந்த உறவுப் பயணம் அன்னையவர்களின் மரணத்திற்குப் பின்பும் தொடர்ந்தது. எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆடு அறுக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அதில் ஒரு பகுதியை எடுத்து, அன்னை கதீஜா (ரலி) அவர்களது குடும்பத்தினர்களுக்கு கொடுத்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.


இன்னும் எப்பொழுதெல்லாம் அண்ணலார் (ஸல்) அவர்களின் வீட்டுக் கதவருகே, விருந்தினர் வந்திருக்கக் கூடியதை அறிவார்களோ அப்பொழுதெல்லாம் வந்திருக்கக் கூடியவர், அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா (ரலி) அவர்களாக இருக்கக் கூடாதா? என்று நினைத்து, இறைவா! வந்திருக்கக் கூடிய விருந்தினர் ஹாலாவாக இருக்கட்டும் என்று பிரார்த்தனை புரியக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

எனவே, சகோதரர்களே..!

இல்லம் என்னும் நல்லறம் தழைக்க பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, குடும்பம் என்னும் பூங்காவில் எப்பொழுதும் இனிமை எனும் பூக்கள் பூத்துக் குலுங்க, இருவரும் ஒத்துழைப்போமாக!


அதற்கு வழித்துணையாக இஸ்லாம் எனும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போமாக..!

நன்றி: http://www.tamilislam.com


பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அப்பாவா நீங்கள்...?!


பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அப்பாவா நீங்கள்...?!

[ என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.

முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.]
தந்தைகளே! கவனியுங்கள்

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.

தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா?

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். 

எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது" என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

"டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி" என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?" என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். 

அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். "நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்" எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.." என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, "என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா...." என புலம்பித் தள்ளாதீர்கள்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். "எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்" எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!

மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் விளைவுகள் தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.


எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது" எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.


இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.
ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்" எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். "ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்" எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். "என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்" எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.


இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.


கடைசியாக ஒன்று. "என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.