குழந்தைகளின் சிந்தனையை சிதைக்கும் டி வி சேனல்


இந்தியா முழுவதுமே பள்ளி கோடை விடுமுறை நாள்களில்குழந்தைகளின் 

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுகேபிள் இணைப்புகள் மூலம் 

ஒளிபரப்பப்படும் குழந்தைகளின் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்ற 

கருத்து சமூக ஆர்வலர்களிடையே மேலோங்கி வருகிறது.
3 வயது குழந்தை முதல்பள்ளி மாணவமாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இத்தகைய சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பிப் பார்ப்பதால்அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.
படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால்கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.
இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போதுபெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோஅல்லது சேனல்களை மாற்றினாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறதுஅதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை.இதனால்அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறதுஉறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர்அப்படியே வந்தாலும்கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லைஅங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான்இதனால்உடல் ரீதியாகவும்மன ரீதியாகவும் அவர்களுக்கு ஒரு விதத் தளர்வும்மன உளைச்சலும் ஏற்படுகின்றன.
சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப்போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.
இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும்பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோசரியாக படிக்கவோவிளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும்இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.
இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைஇதில் மத்தியமாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோஅதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால் அன்றிவருங்கால இந்தியாவல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிரநடைமுறைக்கு சாத்தியமில்லைஏனென்றால் இன்றைய குழந்தைகள் தானே நாளைய இளைஞர்கள்அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும்அப்போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.
எனவேஅரசு இதைக் கருத்தில் கொண்டுகோடை விடுமுறை தொடங்கிவிட்டதுஇனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால்அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும்உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடைசெய்ய வேண்டும்அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.