அனைவருக்கும் ஈதுல் அத்ஹா நல் வாழ்த்துக்கள்

அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகம்
இஸ்லாமிய வாழ்வியலில் புனித ஹஜ் வழிப்பாடா னது மிக முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. அந்த வணக்கமுறையின் உருவாக்கத்திற்கு அல்லது ஆரம்ப நிகழ்வுகளுக்கு ஒரு பெண்ணினது பங்கும் மிக முக்கிய த்துவமுடையதாகக் காணப்படு கிறது.
குறிப்பாக புனித ஹஜ்ஜின் போது ஹஜ் கிரிகைகளின் செயற் பாட்டு ரீதியான வரலாற்றுச் சம்ப வங்களில் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாக உணர்வுகள் முஸ்லிம் உலகின் பெண்ணினத் திற்கே பெருமை சேர்க்கும் கைங்கரியமாகக் காணப்பட்ட அன்றைய தியாக நிகழ்வுகள் உலகிற்கே பறைசாற்றி நிற்கின்றன.
ஹஜ் வணக்க வழிபாடுகளுக்கு கால்கோளாய் அமைந்த தியாகத்தின் உயர் இலட்சியத்தினை அடைவதில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் செயற்பாடுகளுக்கு தமது மனைவி யான அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகமும் முன்னிலை பெறுகிறது.
ஒரு பெண்ணாக இருந்து தன் பிஞ்சுப் பாலகன் பசி யுடன் தகித்துக்கொண்டிருந்த வேளை யில்தான் இறைவன் ஸம் ஸம் எனும் வற்றா நீரூற்றை இவ்வுலகிற்கு அளித்தான். அன்றுமுதல் இன்றுவரை ஏன் உலகம் முடிவுறும் வரையில் இவ்வற்றா நீரூற்று உலக மாந்தர் களுக்கு முடிவுறா நீராகவே காணப் படும் என்பது இறைவன் வாக்கு.
ஹஜ்ஜின் போது ஹஜ்ஜாஜிகள் ஸபா, மர்வா எனும் இரு மலை களுக்கிடையில் ஏழுமுறை தொங் கோட்டம் ஓடுவதன் காரணம், அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அன்று தன் பாலகனுக்கு நீர்த்தேடி இரு மலைகளுக்குமிடையில் ஓடிய அந்நிகழ்வை ஞாபகமூட்டி, அன்னா ரின் தியாகத்தை உணர்த்தவே ஹஜ் மாந்தர் அனைவரும் இவ்வாறு ஓட வேண்டுமென இறைவன் கட்டளையாக இருக்கிறது.
இன்றைய உலகில் பெண் என்னதான் தியாகம் செய்தாலும் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகத்தைவிட மேம்பட்டதாய் இருக்க முடியாது. ஏனென்றால் இறைவனின் கட்டளையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்திய அன்னை ஹாஜரா (அலை) அன்னாரது கணவரான அஜரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் செயற்பாடுகளில் பங்கெடுத்து இன்றைய மக்கா அமைந்துள்ள இடத்தில் தன்னந்தனியாக தன் இளம் பாலகனுடன் கொளுந்து விட்டெரியும் பாலைவனத்தில் தம் இறைவன் இட்ட ஆணையை நிறைவேற்ற மனைவியையும் பிள்ளையையும் விட்டுச் சென்ற அவ்வேளையின் நிகழ்வை உலகில் எப்பெண்தான் ஏற்கத் துணிவாள்? எனவேதான் பெண்களின் உயர் விழுமிய பாங்கையும், அன்புக் கணவன் இட்ட கட்டளையையும் மீறாது நடந்துகொண்டார்கள்.
இன்றைய ஸம் ஸம் நீரூற்று அமைந்துள்ள இடத்தில் கொண்டு வந்து தனிமையில் விட்டு விட்டுத் திரும்பி வருகின்ற போது கேட்கி றார்கள். அன்னையர் ஹாஜரா எவ்வித மனித நடமாட்டமோ வாழ்வதற்கான வசதி வாய்ப்புக் களோ அற்ற இந்த இடத்தில் என்னையும் நம் பாசக் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்கள் (இப்றாஹீம் நபி) எங்கே சொல்கிaர்கள்எனக் கேட்டார்கள்.
அதற்கு இப்றாஹீம் நபி அவர்கள் எதுவும் பேசாது மெளனமாக இருக்க மீண்டும். மனைவி அதே வினாவைத் தொடுக்க மீண்டும் மெளனமாகி றார்கள். மனைவியவர்கள் 3ம் தடவையும் கேட்கிறார்கள். இது அல்லாஹ்வின் கட்டளையா? ஆம் இது அல்லாஹ்வின் கட்டனையேதான் எனக் கூறியதும் நீங்கள் அக்கட்டளையை நிறைவேற்றுங்கள்.
எங்களை அந்த அல்லாஹ்வே காப்பாற்றுவான்என இறை நம்பிம்பிக்கையை முன்னிலைப்படுத்திய நம்பிக்கையுடன் கூறி தன் கணவனுக்கு விடைகொடுத்தார்கள் இதுதான் தியாகம்!யாருமற்ற பாலைவனத்தில் தமது பிஞ்சுக் குழந்தையுடன் தனிமையில் இருக்கக வேண்டுமே என அஞ்சாத நெஞ்சத்துடன் பசித்தாகத்தைப் பெரிதாக நினைக்காது இறைக்கட்டளைக்கு அடிபணிந்து, கணவன் சொற்கேட்ட மனைவியாக அவ்வாறு நடந்து கொண்டதை, அந்த ஈமானிய வெளிப்பாட்டின் உறுதியினை தனிப்பெண்ணாக இருந்து வாழ்ந்து காட்டிய அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் உயர்ந்த பெண்ணாக மளிர்கிறார்.
இன்றைய அறபு நாடு செல்வச் செழிப்பு மிக்கதாய் திகழ்வதற்கும் உலக மக்கள் ஒன்றுகூடும் இடமாக மக்கமா நகரம் திகழ்வதற்கும், அபயமளிக்கப்பட்ட பூமியாக திகழவும் இப்றாஹீம் நபி அவர்களினதும், மனைவியார் ஹாஜரா (அலை), தனயன் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உறுதியான ஈமானிய வெளிப்பாடே புனித ஹஜ் எனும் கடமையில் கூடிய பாங்கினை செலுத்தும் கிரிகைகளின் தொகுப்பாய் அமைந்துள்ளது; கணவன் தனிமையில் விட்டபோது கணவன் மீது எவ்விதமான எரிச்சலும் கோபமும் கொள்ளாது, தனையனது பசியினை போக்கிடவும் அவ்வேளை அவர்கள் பட்ட துயர் உலகில் எந்த பெண்ணுக்குத்தான் முடியும்.
எனவேதான் அல்லாஹ்வின் பற்றுறுதி வாய்ந்த அசைக்க முடியாத ஈமானியத்தின் உச்சியில் நிற்கிறார் அன்னை ஹாஜரா நாயகி அவர்கள். உலக முஸ்லிம் பெண்மணிகளின் முன்மாதிரியாகத் திகழும் இவர்களின் தியாகத்தின் விளைவு உலக முடிவு நாள்வரையும் உலக மக்களால் பேணப்பட்டு வரும் ஹஜ் வணக்கத்தின் பல செயற்பாடுகளில் அன்னை ஹாஜரா அவர்கள் பட்ட துயரின் மீட்டலை முஸ்லிம் உம்மா குறிப்பாக பெண்ணினம் இவ்வேளை நினைவு கூர்வது இஸ்லாமிய நெஞ்சங்களின் தார்மீக கடமையல்லவா.