முஸ்லிம்களே உஷார்! போலிக்குர்ஆன்!

குர்ஆனுக்கெதிராக சூழ்ச்சிகள்.
இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை அதன் தூய கொள்கைகளையும் வேத நெறிகளையும் தகர்க்க பல் வேறு சூழ்ச்சிகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்தே வந்துள்ளன.
நபி பெரமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் எதிர்த்தவர்கள் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல முயற்சிகளை பல் வேறு வடிவங்களில் மேற் கொண்டனர். அனைத்திலும் தோல்வியே கண்டனர். இருந்தும் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லையே அது மிகவேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறதே என்ற ஆவேசம் குறையவே இல்லை.
கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி பல முனைத் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

அல்குர்ஆனை அழிக்க பெரும் சதி!
முஸ்லிமகளை வழிநடத்தும் அருள்மறை அல்குர்ஆனை அழித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்று பகற்கனவு கண்டு வருகின்றனர்.அதற்காக,
ஷீஆயிஸம்,காதியானியிஸம்,சூபித்துவம்,தரீக்காயிஸம் போன்ற பல இயக்கங்களை தோற்றுவித்தும் அது முடியாமற் போயிற்று.

பல இலட்சம் பிரதிகள்!
குர்ஆனிலுள்ள யூதர்களுக்கெதிரான வசனங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு இசைவான வசனங்களை சேர்த்து பல இலட்சம் பிரதிகளை அச்சடித்து ஆப்ரிக்க நாடுகளிலும்,ஆசிய நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வினியோகித்தனர். கூலிப்படையினரின் சூழ்ச்சிகளில் அகப்பட்ட அப்பாவிமக்கள் யாது செய்வதென அறியாது திகைத்தனர்.
இந்தோனேசியாவில் ”மேடான்” என்ற நகரில் மட்டும் 25000 பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இந்தத் தகவலை நேரிலே கண்டு நாம் கூறியதும், ‘ பல நாடுகளில் விற்பனைக்காகவும், வினியோகத்திற்காக வுமிருந்த பிரதிகளை ‘ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா’ என்ற உலக இஸ்லாமிய அமைப்பு அவற்றை வாங்கி தீ வைத்துக் கொளுத்தின.

அமெரிக்கப் போலிக் குர்ஆன்
யூதர்களைத் தெடர்ந்து அமெரிக்காவின் சதிகள் தொடந்தன. இஸ்லாத்திற்கெதிராக பல்வேறு புத்தகங்களையும், இணைய தளங்களையும் வெளியிட்டும் ஆத்திரம் அடங்கவில்லை. ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற போலி முஸ்லிம்களை வைத்து பல நூல்களையும் கதைகளையும் எழுதினர்.
 எஃகு போன்ற உறுதிமிக்க கொள்கைப்பிடிப்புமிக்க முஸ்லிம்களை எந்த வகையிலும் அசைக்க முடியவில்லை. நாடகம் தொடர்ந்தது! தங்கள் வேதங்களிலே விரும்பியவாறு எழுதி விளையாடியது போன்று குர்ஆனிலும் விளையாட மீண்டும் தொடங்கியுள்ளனர். பல யூத கிறித்தவ அறிஞர்களின் ஆதரவோடும் ஆக்கங்களோடும் புதிய குர்ஆன் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதோ ! படியுங்கள்.!

போலிக்குர்ஆன்!
பெயர் :  ” The True Furqan”  (உண்மைக் குர்ஆன்)
ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் சூது நிறைந்த ஒரு புதிய குர்ஆனை அமெரிக்கர்கள் உருவாக்கி ‘தி ட்ரூ ஃபுர்கான்’ – உண்மையான குர்ஆன்- என்ற பெயரில் குவைத் பாடசாலைகளில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் ‘சாத்தானின் வசனங்கள்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகவலை ‘அல் புர்கான்’ வார இதழ் கண்டுபிடித்து அதை வெளியிட்டுள்ள இரு புத்தக வெளியீட்டாளர்கள் பெயர்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. ‘ஒமேகா-2001, ஓய்ன் பதிப்பகம்’ ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தான் இந்த கைங்கரியத்தை அரங் கேற்றியுள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்ல ‘ இது 21-வது நூற்றாண்டின் தலை சிறந்த குர்ஆன்’ எனவும் விமர்சனம் செய்துள்ளது.
366 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அரபி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படுகிறது. இதனை குவைத் தனியார் ஆங்கில பாடசாலைகளில் வினியோகமும் செய்துள்ளனர்.
இந்நூலில் 77அத்தியாயங்களே உள்ளன.அதில் பாத்திஹாவுடன் அல்ஜனா, இஞ்சீல் என இரு புதிய அத்தியாயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன.
அத்தியாயத்தின் காப்பு வாக்கியமான பிஸ்மில்லாஹ்வுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் முக்கடவுள் கொள்கையைக் குறிக்கும் (Trinity-திரீத்துவம்)  ‘முக்கடவுள்களின் அருளால்’ என்ற நீண்ட வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புதிய குர்ஆன் உலகின் எல்லா இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அவர்களின் உணர்வுளை சீண்டியுள்ளது.

நச்சுக்கருத்துகளை திணித்துள்ளனர்.
அது மட்டுமல்ல, அதில்
1. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது கூடாது.(அதாவது பலதாரமணம் கூடாது)
2. விவாகரத்துக்கு அனுமதி கிடையாது.
3. நடைமுறையில் உள்ள சொத்துரிமை சட்டங்களை மாற்றி உயில் மூலம் விரும்பியவருக்கு சொத்துரிமை வழங்கலாம்.
4. இஸ்லாத்தில் ஜிஹாத்- மார்க்கப்போர் ‘ஹராம்’ தடைசெய்யப் பட்டுள்ளது.மேலும்,
அல்லாஹ்வின் வல்லமையை விமர்சனமும் செய்து பல நச்சுக் கருத்துக்களையும் திணித்து ‘மூன்று டாலர் விலைதான்’ என மலிவு விலையிலும் வெளியிட்டுள்ளது.

அல்லாஹ்வின் பாதுகாப்பு
கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை உலகளாவிய அளவில் செய்தாலும் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனை அணைத்துவிட முடியாது! அழித்துவிட முடியாது! ‘அதை நாம் பாதுகாத்தே தீருவோம்’ என்ற உத்தரவாதத்தை அதை அருளிய நாயனே நமக்குத் தந்துள்ளான்.

இதோ அந்த உத்தரவாதம்
உலகப்பொது மறையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
                                                           
َّ    إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ                                 
நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை அருளினோம்! மேலும் நாமே இதை பாதுகாப்போம். (الحجر: ٩அல்ஹுஜர் 15:09)
يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُون                                                                  
الصف: ٨)
நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் ஒளியை தங்களின் வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை (அணைக்கவிடாமல்) பூரணமாக்கவே விரும்புகிறான். (அஸ்ஸஃப் 61:08)

முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!
இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ? நமது இறையருள் வேதமாம் உலகப்பொது மறை அல்குர்ஆனின் மாண்பினைப் புரியாது அதை துணியில் சுற்றி ஏதோ வீட்டு மாடத்தில் கைக்கெட்டா விட்டத்தில் தூக்கி வீசியதன் விளைவு தான் இன்று நமது எதிரிகள் நம் குர்ஆனோடு விளையாடத் துவங்கியுள்ளனர்.


நன்றி-- http://albaqavi.com