மணவாழ்வில் மகிழ்வுற.

திருமணம் என்பது வெறும் உடலியல் மகிழ்வு, அதிகம் பிள்ளைகள் உள்ளனர் என்று பெருமை பாராட்டுவதற்கான வழிஇ  அதிகாரம் செலுத்தவும் அடக்குமுறை செலுத்தவும் ஒரு சந்தர்ப்பம் மற்றும் வாழையடி வாழையாக நம் முன்னோர் செய்து வந்த வழமை..இப்படியெல்லாம் பலர் நினைக்க சிலரே இது ஒரு தூது, மிகப்பெரும் பொறுப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, அழ்ழாஹ்வின் பாதையில் செய்யப்படும் தியாகம் என்பதை உணர்கின்றனர்;
‘நான்கு விடயங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியது: ஸாலிஹான மனைவி, போதுமான இருப்பிடம், ஸாலிஹான அண்டை வீட்டான், நல்ல வாகனம் என்பனவையாகும். நான்கு விடயங்கள் துக்கம் தரக்கூடியது: தீய மனைவி, நெருக்கடியான உறைவிடம், தீய அண்டை வீட்டான், பிரச்சினை தரக்கூடிய வாகனம் என்பனவையாகும்.’ (அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), நூல்: இப்னுஹிப்பான் 4094, பைஹகீ 9021)